என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஷிய தடுப்பூசி விலை ரூ.750 - ஆண்டுக்கு 85 கோடி உற்பத்திக்கு நடவடிக்கை
Byமாலை மலர்13 April 2021 10:12 PM GMT (Updated: 13 April 2021 10:12 PM GMT)
இந்தியாவில் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ.750 ஆக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி:
ரஷியா கடந்த ஆண்டு உலகின் முதல் கொரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை உருவாக்கியது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் இறக்குமதி செய்து வினியோகிக்கும் உரிமையை ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் பெற்றுள்ளது.
இந்த தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்கலாம் என்ற பரிந்துரையை மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்கள் குழு நேற்று முன்தினம் வழங்கியது. அதை ஏற்றுக்கொண்டு, தனது ஒப்புதலை இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை இயக்குனர் நேற்று வழங்கினார்.
இதன்மூலம் இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளைத் தொடர்ந்து அவசர கால பயன்பாட்டுக்கு வரும் மூன்றாவது தடுப்பூசி என்ற பெயரை ஸ்புட்னிக்-வி பெறுகிறது.
இந்த தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தலாம். இந்த தடுப்பூசியின் அரை மில்லி அளவை முதல் டோசாக செலுத்திக்கொள்ள வேண்டும். 21 நாட்களுக்கு பின்னர், அதே அளவில் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும் இந்த தடுப்பூசியை மைனஸ் 18 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் பாதுகாத்து வைக்க முடியும்.
இந்த தடுப்பூசியால் வலுவான ஒவ்வாமை கிடையாது என்பது சாதகமான அம்சங்களில் முக்கியமானது ஆகும்.
இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ள 60-வது நாடு இந்தியா ஆகும். அதுமட்டுமின்றி, இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கிய அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியாதான். இந்த தடுப்பூசியின் முன்னணி உற்பத்தி மையமாகவும் இந்தியா விளங்கும்.
இந்த தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல் அளித்திருப்பது குறித்து ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமைச்செயல் அதிகாரி கிரில் டிமிட்ரீவ் கூறியதாவது:-
இரு நாடுகளும், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை மற்றும் அதன் உள்ளூர் உற்பத்தியில் விரிவான ஒத்துழைப்பை அளித்து வருவதால் இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்திருப்பது ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இந்த தடுப்பூசி 91.6 சதவீதம் செயல்திறனை கொண்டுள்ளது. இது தீவிரமான பாதிப்பிலும்கூட முழு பாதுகாப்பானது என்பதை ‘தி லேன்சட்’ மருத்துவ பத்திரிகையில் வெளியான தரவுகள் காட்டுகின்றன.
இந்தியா தடுப்பூசி உற்பத்தி மையம் ஆகும். மேலும், ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உற்பத்தியின் கூட்டாளியும் ஆகும்.
இந்த தடுப்பூசியின் உற்பத்திக்கு இந்தியாவின் பல முன்னணி மருந்து நிறுவனங்களுடன் நாங்கள் கூட்டாண்மைகளை உருவாக்கி உள்ளோம். இதன்மூலம் இந்திய மக்களுக்கும், உலகளாவிய வினியோகத்துக்கும் இந்த தடுப்பூசி வழங்கப்படும்.
இந்தியாவில் 85 கோடி டோசுக்கும் அதிகமான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும். இதன்மூலம் உலகமெங்கும் ஆண்டுக்கு 42.5 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தடுப்பூசி ஒரு டோஸ் விலை 10 டாலருக்கு குறைவாக (சுமார் ரூ.750) இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷியா கடந்த ஆண்டு உலகின் முதல் கொரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை உருவாக்கியது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் இறக்குமதி செய்து வினியோகிக்கும் உரிமையை ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் பெற்றுள்ளது.
இந்த தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்கலாம் என்ற பரிந்துரையை மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்கள் குழு நேற்று முன்தினம் வழங்கியது. அதை ஏற்றுக்கொண்டு, தனது ஒப்புதலை இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை இயக்குனர் நேற்று வழங்கினார்.
இதன்மூலம் இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளைத் தொடர்ந்து அவசர கால பயன்பாட்டுக்கு வரும் மூன்றாவது தடுப்பூசி என்ற பெயரை ஸ்புட்னிக்-வி பெறுகிறது.
இந்த தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தலாம். இந்த தடுப்பூசியின் அரை மில்லி அளவை முதல் டோசாக செலுத்திக்கொள்ள வேண்டும். 21 நாட்களுக்கு பின்னர், அதே அளவில் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும் இந்த தடுப்பூசியை மைனஸ் 18 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் பாதுகாத்து வைக்க முடியும்.
இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ள 60-வது நாடு இந்தியா ஆகும். அதுமட்டுமின்றி, இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கிய அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியாதான். இந்த தடுப்பூசியின் முன்னணி உற்பத்தி மையமாகவும் இந்தியா விளங்கும்.
இந்த தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல் அளித்திருப்பது குறித்து ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமைச்செயல் அதிகாரி கிரில் டிமிட்ரீவ் கூறியதாவது:-
இரு நாடுகளும், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை மற்றும் அதன் உள்ளூர் உற்பத்தியில் விரிவான ஒத்துழைப்பை அளித்து வருவதால் இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்திருப்பது ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இந்த தடுப்பூசி 91.6 சதவீதம் செயல்திறனை கொண்டுள்ளது. இது தீவிரமான பாதிப்பிலும்கூட முழு பாதுகாப்பானது என்பதை ‘தி லேன்சட்’ மருத்துவ பத்திரிகையில் வெளியான தரவுகள் காட்டுகின்றன.
இந்தியா தடுப்பூசி உற்பத்தி மையம் ஆகும். மேலும், ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உற்பத்தியின் கூட்டாளியும் ஆகும்.
இந்த தடுப்பூசியின் உற்பத்திக்கு இந்தியாவின் பல முன்னணி மருந்து நிறுவனங்களுடன் நாங்கள் கூட்டாண்மைகளை உருவாக்கி உள்ளோம். இதன்மூலம் இந்திய மக்களுக்கும், உலகளாவிய வினியோகத்துக்கும் இந்த தடுப்பூசி வழங்கப்படும்.
இந்தியாவில் 85 கோடி டோசுக்கும் அதிகமான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும். இதன்மூலம் உலகமெங்கும் ஆண்டுக்கு 42.5 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தடுப்பூசி ஒரு டோஸ் விலை 10 டாலருக்கு குறைவாக (சுமார் ரூ.750) இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X