என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மராட்டியத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்த 8 பேரின் உடல்கள் ஒன்றாக போட்டு தகனம்
Byமாலை மலர்8 April 2021 12:23 AM GMT (Updated: 8 April 2021 12:23 AM GMT)
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி பலி எண்ணிக்கையும் 300-ஐ நெருங்கி உள்ளது.
அவுரங்காபாத்:
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி பலி எண்ணிக்கையும் 300-ஐ நெருங்கி உள்ளது.
இந்தநிலையில் பல சுடுகாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தகனம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக கொரோனா பரவும் என்ற பீதியால் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதேபோல பீட் மாவட்டம், அம்பாஜோகாய் நகர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறுதி சடங்குகளை மேற்கொள்ள அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து உள்ளூர் அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தகனம் செய்ய தற்காலிகமாக அங்கிருந்து 2 கி.மீட்டர் தூரத்தில் உள்ள மண்ட்வா சாலையில் மற்றொரு இடத்தை அடையாளம் கண்டனர்.
இருப்பினும் இந்த பகுதியில் இடவசதி குறைவாக உள்ளது. ஆனால் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு ஒரே நேரத்தில் பலரின் உடல்களை தகனம் செய்யும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.
இதன்படி நேற்று 8 பேரின் உடல்களை ஒரே தகன மேடையில் போட்டு சிதைக்கு தீ மூட்டினர்.
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி பலி எண்ணிக்கையும் 300-ஐ நெருங்கி உள்ளது.
இந்தநிலையில் பல சுடுகாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தகனம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக கொரோனா பரவும் என்ற பீதியால் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதேபோல பீட் மாவட்டம், அம்பாஜோகாய் நகர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறுதி சடங்குகளை மேற்கொள்ள அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து உள்ளூர் அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தகனம் செய்ய தற்காலிகமாக அங்கிருந்து 2 கி.மீட்டர் தூரத்தில் உள்ள மண்ட்வா சாலையில் மற்றொரு இடத்தை அடையாளம் கண்டனர்.
இருப்பினும் இந்த பகுதியில் இடவசதி குறைவாக உள்ளது. ஆனால் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு ஒரே நேரத்தில் பலரின் உடல்களை தகனம் செய்யும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.
இதன்படி நேற்று 8 பேரின் உடல்களை ஒரே தகன மேடையில் போட்டு சிதைக்கு தீ மூட்டினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X