என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரபேல் ஒப்பந்தம் : கர்மவினையில் இருந்து யாரும் தப்ப முடியாது - ராகுல் டுவிட்டர் பதிவு
Byமாலை மலர்6 April 2021 6:55 PM GMT (Updated: 6 April 2021 6:55 PM GMT)
ரபேல் ஒப்பந்தத்தில் இடைத்தரகர்களுக்கு ரூ.9 கோடி கமிஷன் கொடுக்கப்பட்டதாக பிரெஞ்சு செய்தி நிறுவனம் ஒன்று சமீபத்தில் தகவல் வௌியிட்டது.
புதுடெல்லி:
ரபேல் போர்விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதை முன்வைத்து கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அக்கட்சி தீவிர பிரசாரம் மேற்கொண்டது.
தேர்தலில் காங்கிரஸ் தோல்விகண்டதால், ரபேல் போர்விமான சர்ச்சை சற்று ஓய்ந்திருந்தது.
இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தில் இடைத்தரகர்களுக்கு ரூ.9 கோடி கமிஷன் கொடுக்கப்பட்டதாக பிரெஞ்சு செய்தி நிறுவனம் ஒன்று சமீபத்தில் தகவல் வௌியிட்டது. அதை மத்திய பா.ஜ.க. அரசு மறுத்தாலும், மீண்டும் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.
ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ராகுல் காந்தி திரும்பத் திரும்ப கூறிவந்தது தற்போது நிரூபணம் ஆகியுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று, ‘கர்மா- ஒருவரின் செயல்கள் பதிவாகும் பேரேடு. யாரும் அதிலிருந்து தப்ப முடியாது. ரபேல்’ என்று மத்திய அரசை தாக்கி ஆங்கிலத்தில் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதேபோல இந்தியிலும் அவர் டுவிட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார்.
ரபேல் போர்விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதை முன்வைத்து கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அக்கட்சி தீவிர பிரசாரம் மேற்கொண்டது.
தேர்தலில் காங்கிரஸ் தோல்விகண்டதால், ரபேல் போர்விமான சர்ச்சை சற்று ஓய்ந்திருந்தது.
இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தில் இடைத்தரகர்களுக்கு ரூ.9 கோடி கமிஷன் கொடுக்கப்பட்டதாக பிரெஞ்சு செய்தி நிறுவனம் ஒன்று சமீபத்தில் தகவல் வௌியிட்டது. அதை மத்திய பா.ஜ.க. அரசு மறுத்தாலும், மீண்டும் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று, ‘கர்மா- ஒருவரின் செயல்கள் பதிவாகும் பேரேடு. யாரும் அதிலிருந்து தப்ப முடியாது. ரபேல்’ என்று மத்திய அரசை தாக்கி ஆங்கிலத்தில் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதேபோல இந்தியிலும் அவர் டுவிட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X