search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    24 மணி நேரத்தில் 9,309 பேருக்கு தொற்று, 87 பேர் உயிரிழப்பு... இந்தியா கொரோனா அப்டேட்ஸ்

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,309 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 87 பேர் உயிரிழந்துள்ளனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,08,80,603 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 87 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,55,447 ஆக உயர்ந்துள்ளது. 

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,05,89,230 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 15,858 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 97.32 சதவீதமாக உள்ளது. 

    சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,35,926 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 75,05,010 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று 4,87,896 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 
    Next Story
    ×