என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகத்தில் 29 மாவட்டங்களில் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை
Byமாலை மலர்10 Feb 2021 1:40 AM GMT (Updated: 10 Feb 2021 1:40 AM GMT)
5 ஆயிரத்து 785 பேர் சிகிச்சையில் உள்ளனர். 29 மாவட்டங்களில் கொரோனாவுக்கு உயிர் இழப்பு இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு :
கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று புதிதாக 366 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 43 ஆயிரத்து 212 ஆக உயர்ந்து உள்ளது.
மேலும் 2 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை 12 ஆயிரத்து 241 ஆக உள்ளது.
பெங்களூரு நகரில் 195 பேர், தட்சிண கன்னடாவில் 29 பேர், துமகூருவில் 17 பேர், பெங்களூரு புறநகரில் 20 பேர், மைசூருவில் 15 பேர் உள்பட 366 பேர் பாதிக்கப்பட்டனர்.
கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் மட்டும் 2 பேர் இறந்தனர். மற்ற 29 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. 513 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். ஒட்டுமொத்தமாக இதுவரை 9 லட்சத்து 25 ஆயிரத்து 167 பேர் குணம் அடைந்து உள்ளனர். 5 ஆயிரத்து 785 பேர் சிகிச்சையில் உள்ளனர். 143 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
நேற்று 60 ஆயிரத்து 485 பேருக்கு கொரோனா சோதனை நடந்தது. ஒட்டுமொத்தமாக 1 கோடியே 76 லட்சத்து 25 ஆயிரத்து 719 பேருக்கு பரிசோதனை நடந்து உள்ளது.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று புதிதாக 366 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 43 ஆயிரத்து 212 ஆக உயர்ந்து உள்ளது.
மேலும் 2 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை 12 ஆயிரத்து 241 ஆக உள்ளது.
பெங்களூரு நகரில் 195 பேர், தட்சிண கன்னடாவில் 29 பேர், துமகூருவில் 17 பேர், பெங்களூரு புறநகரில் 20 பேர், மைசூருவில் 15 பேர் உள்பட 366 பேர் பாதிக்கப்பட்டனர்.
கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் மட்டும் 2 பேர் இறந்தனர். மற்ற 29 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. 513 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். ஒட்டுமொத்தமாக இதுவரை 9 லட்சத்து 25 ஆயிரத்து 167 பேர் குணம் அடைந்து உள்ளனர். 5 ஆயிரத்து 785 பேர் சிகிச்சையில் உள்ளனர். 143 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
நேற்று 60 ஆயிரத்து 485 பேருக்கு கொரோனா சோதனை நடந்தது. ஒட்டுமொத்தமாக 1 கோடியே 76 லட்சத்து 25 ஆயிரத்து 719 பேருக்கு பரிசோதனை நடந்து உள்ளது.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X