என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிகமான தடுப்பூசி போட்டதில் இந்தியாவுக்கு 3-வது இடம்
Byமாலை மலர்8 Feb 2021 2:27 AM GMT (Updated: 8 Feb 2021 2:27 AM GMT)
அதிகமான ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி போட்டதில், உலக அளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
புதுடெல்லி:
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இன்று (நேற்று) காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 57 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில் 53 லட்சத்து 4 ஆயிரத்து 546 பேர் சுகாதார பணியாளர்கள். 4 லட்சத்து 70 ஆயிரத்து 776 பேர் முன்கள பணியாளர்கள்.
24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 875 அமர்வுகளில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 473 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1 லட்சத்து 15 ஆயிரத்து 178 அமர்வுகள் நடந்துள்ளன.
அதிகமான ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி போட்டதில், உலக அளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது.
இந்தியாவில் 12 மாநிலங்கள் தலா 2 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போட்டுள்ளன.உத்தரபிரதேசத்தில் மட்டும் 6 லட்சத்து 73 ஆயிரத்து 542 பேருக்கு போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X