என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜனவரி 26 டிராக்டர் பேரணியில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ
Byமாலை மலர்2 Feb 2021 4:52 AM GMT (Updated: 2 Feb 2021 4:52 AM GMT)
டெல்லியில் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்ற டிராக்டர் பேரணியில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் வீடியோ பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி கலவரமாக போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதலில் முடிந்தது. இந்நிலையில், போராட்டக்களத்தில் எடுக்கப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள சிசிடிவி கேமராவை உடைக்க முயற்சிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. இந்த வீடியோ போலீசாரை குற்றம்சாட்டும் தலைப்புகளுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என தெரியவந்துள்ளது. மேலும் அதனை உறுதிப்படுத்தும் செய்திகளும் இணையத்தில் கிடைக்கப் பெற்றன.
அந்த வகையில் பாதுகாப்பு அதிகாரி சிசிடிவி கேமராவை சேதப்படுத்திய சம்பவம் சமீபத்திய டிராக்டர் பேரணியில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X