என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தொற்றால் தீவிர சிகிச்சை- சசிகலா விடுதலையாவதில் தாமதமாக வாய்ப்பு?
Byமாலை மலர்22 Jan 2021 6:43 AM GMT (Updated: 22 Jan 2021 6:43 AM GMT)
கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருவதால் சசிகலா விடுதலையாவதில் தாமதம் ஆக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு:
சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனா வார்டில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் குணம் அடைந்து வெளியே வர இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் ஆகும் என தெரிகிறது.
சசிகலா வருகிற 27-ந் தேதி சிறையில் இருந்து விடுதலையாக உள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் தொடர்ந்து 15 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் விடுதலையாவதில் தாமதம் ஆக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “27-ந்தேதி அவர் விடுதலை ஆகும்பட்சத்தில் அவரிடம் கையெழுத்து பெற்று அவரது உடைமைகளை நாங்கள் ஒப்படைக்க வேண்டும். தற்போது அவர் கொரோனா வார்டில் சிகிச்சையில் உள்ளதால் இதுபற்றி சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்ய உள்ளோம்” என்று தெரிவித்தனர்.
சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனா வார்டில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் குணம் அடைந்து வெளியே வர இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் ஆகும் என தெரிகிறது.
சசிகலா வருகிற 27-ந் தேதி சிறையில் இருந்து விடுதலையாக உள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் தொடர்ந்து 15 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் விடுதலையாவதில் தாமதம் ஆக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “27-ந்தேதி அவர் விடுதலை ஆகும்பட்சத்தில் அவரிடம் கையெழுத்து பெற்று அவரது உடைமைகளை நாங்கள் ஒப்படைக்க வேண்டும். தற்போது அவர் கொரோனா வார்டில் சிகிச்சையில் உள்ளதால் இதுபற்றி சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்ய உள்ளோம்” என்று தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X