search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பாதிப்பு
    X
    கொரோனா பாதிப்பு

    கர்நாடகத்தில் புதிதாக 970 பேருக்கு கொரோனா

    கர்நாடகத்தில் புதிதாக 970 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகதாரத்துறை தெரிவித்துள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 9 லட்சத்து 24 ஆயிரத்து 898 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 970 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனால் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 25 ஆயிரத்து 868 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மாநிலத்தில் மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 134 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 657 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 4 ஆயிரத்து 286 ஆக அதிகரித்துள்ளது.

    தற்போது மருத்துவமனைகளில் 9 ஆயிரத்து 429 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தீவிர சிகிச்சை பிரிவில் 203 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் இருந்து திரும்பியவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 40 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

    புதிதாக கொரோனா பாதித்தோரில், பாகல்கோட்டையில் 5 பேர், பல்லாரியில் 21 பேர், பெலகாவியில் 27 பேர், பெங்களூரு புறநகரில் 26 பேர், பெங்களூரு நகரில் 479 பேர், பீதரில் 7 பேர், சாம்ராஜ்நகரில் 6 பேர், சிக்பள்ளாப்பூரில் 8 பேர், சிக்கமகளூருவில் 14 பேர், சித்ரதுர்காவில் 10 பேர், தட்சிண கன்னடாவில் 62 பேர், தாவணகெரேயில் 16 பேர், தார்வாரில் 14 பேர், கதக்கில் 6 பேர், ஹாசனில் 15 பேர், கலபுரகியில் 35 பேர், குடகில் 14 பேர், கோலாரில் 18 பேர், கொப்பலில் 5 பேர், மண்டியாவில் 26 பேர், மைசூருவில் 45 பேர், ராமநகரில் 5 பேர், சிவமொக்காவில் 17 பேர், துமகூருவில் 39 பேர், உடுப்பியில் 16 பேர், உத்தரகன்னடாவில் 18 பேர், விஜயாப்புராவில் 6 பேர், யாதகிரியில் 3 பேர் உள்ளனர்.

    கொரோனாவுக்கு பெங்களூருவில் 2 பேர், சிவமொக்காவில் ஒருவர் என மொத்தம் 3 பேர் பலியாகியுள்ளனர்.

    இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×