search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2.3 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது- இந்தியா கொரோனா அப்டேட்ஸ்

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,088 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    உலக அளவில் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் தற்போது 2 தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், புதிய நோயாளிகளின் எண்ணிக்கை, மற்றும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. 

    கடந்த மாதம் புதிய தொற்று எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில், தற்போது 20 ஆயிரத்தைவிட குறைந்துள்ளது.  அதேசமயம், குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

    இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,03,74,932 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18,088 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 264 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்றைவிட புதிய தொற்று எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு குறைந்துள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,50,114 ஆக உயர்ந்துள்ளது. 

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 99,97,272 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 21,314 பேர் குணமடைந்துள்ளனர்.

    செப்டம்பர் மாத மத்தியில், சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் என்ற அளவில் இருந்தது. அதன்பின்னர் படிப்படியாக குறையத் தொடங்கி இன்று 2.3 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,27,546 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மொத்த உயிரிழப்பு 1.45 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 96.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. 
    Next Story
    ×