search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள சட்டசபை கூட்டம்
    X
    கேரள சட்டசபை கூட்டம்

    வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும் -கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    திருவனந்தபுரம்:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் நலனுக்கு எதிராக இருப்பதாகவும், அதனால் அந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்றும் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டன.

    இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்காக கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்தார். 

    விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு தீர்வு காணப்பட வேண்டும், மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய முதல்வர், விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தால் அது கேரளாவை கடுமையாக பாதிக்கும் என்பதை தற்போதைய நிலைமை தெளிவுபடுத்துகிறது. மற்ற மாநிலங்களிலிருந்து உணவுப் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டால் கேரளா பட்டினி கிடக்கும் என்பதில் சந்தேகமில்லை, என்றார்.

    பின்னர் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினர். விவாதத்திற்கு பிறகு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    Next Story
    ×