search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி
    X
    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி

    நாடு தழுவிய முழு அடைப்புக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு -மாயாவதி அறிவிப்பு

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை நடைபெற உள்ள பாரத் பந்த் போராட்டத்திற்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் புராரி மைதானத்திலும், டெல்லியின் எல்லைப்பகுதிகளிலும் விவசாயிகளின் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் எல்லை நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு 5 சுற்றுகள் பேச்சுவார்த்தைகள் நடத்தியும், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனால் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவை திரட்டும் வகையில், நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு (பாரத் பந்த்) விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இப்போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்தவண்ணம் உள்ளன. 

    அவ்வகையில் பாரத் பந்த் போராட்டத்திற்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதனை மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
    Next Story
    ×