என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியானாவில் விஷ சாராயத்துக்கு மேலும் 11 பேர் பலி - 4 நாட்களில் 31 பேர் உயிரிழந்த சோகம்
Byமாலை மலர்5 Nov 2020 9:31 PM GMT (Updated: 5 Nov 2020 9:31 PM GMT)
அரியானாவில் விஷ சாராயத்துக்கு மேலும் 11 பேர் உயிரிழந்த நிலையில் கடந்த 4 நாட்களில் விஷ சாராயத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்து விட்டது.
சண்டிகர்:
அரியானாவின் சோனிபட் மற்றும் பானிபட் மாவட்டங்களில் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டங்களில் சமீபத்தில் இந்த சாராயம் குடித்த பலருக்கும் வாந்தி உள்ளிட்ட உடல் நலக்கோளாறுகள் ஏற்பட்டன.
இந்த விஷ சாராயம் குடித்ததால் அடுத்தடுத்து மரணங்களும் நிகழ்ந்தன. அந்தவகையில் நேற்று முன்தினம் வரை 20 பேர் இந்த மாவட்டங்களில் அடுத்தடுத்து பலியாகினர்.
இந்த நிலையில் நேற்றும் சோனிபட் மாவட்டத்தில் 7 பேரும், பானிபட் மாவட்டத்தில் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களும் விஷ சாராயம் குடித்திருந்தது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் கடந்த 4 நாட்களில் விஷ சாராயத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்து விட்டது. இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே சோனிபட் போலீசார் கர்காவுடா பகுதியில் சட்ட விரோதமாக இயங்கி வந்த சாராய ஆலை ஒன்றை கண்டுபிடித்து அழித்தனர். இது தொடர்பாக ஒருவரை அவர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அரியானாவின் சோனிபட் மற்றும் பானிபட் மாவட்டங்களில் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டங்களில் சமீபத்தில் இந்த சாராயம் குடித்த பலருக்கும் வாந்தி உள்ளிட்ட உடல் நலக்கோளாறுகள் ஏற்பட்டன.
இந்த விஷ சாராயம் குடித்ததால் அடுத்தடுத்து மரணங்களும் நிகழ்ந்தன. அந்தவகையில் நேற்று முன்தினம் வரை 20 பேர் இந்த மாவட்டங்களில் அடுத்தடுத்து பலியாகினர்.
இந்த நிலையில் நேற்றும் சோனிபட் மாவட்டத்தில் 7 பேரும், பானிபட் மாவட்டத்தில் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களும் விஷ சாராயம் குடித்திருந்தது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் கடந்த 4 நாட்களில் விஷ சாராயத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்து விட்டது. இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே சோனிபட் போலீசார் கர்காவுடா பகுதியில் சட்ட விரோதமாக இயங்கி வந்த சாராய ஆலை ஒன்றை கண்டுபிடித்து அழித்தனர். இது தொடர்பாக ஒருவரை அவர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X