என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நான் மீண்டும் முதல்-மந்திரி ஆனால் 10 கிலோ இலவச அரிசி: சித்தராமையா
Byமாலை மலர்21 Oct 2020 1:41 AM GMT (Updated: 21 Oct 2020 1:41 AM GMT)
நான் மீண்டும் முதல்-மந்திரி ஆனால் ஏழை மக்களுக்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்குவேன் என்று கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, தனது தொகுதியான பாதாமியில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-
ஏழை மக்கள் யாரும் உணவு இன்றி பசியால் வாடக்கூடாது. வயிறு நிறைய சாப்பிட வேண்டும். வெள்ளம், வறட்சி எது வந்தாலும் மக்கள் வயிறு நிறைய சாப்பிட்டு நிம்மதியாக இருக்க வேண்டும். நான் மீண்டும் முதல்-மந்திரி ஆனால் ஏழை மக்களுக்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்குவேன்.
நான் ஆட்சியில் இருந்த வரைக்கும் கஜானா நிரம்பியே இருந்தது. எடியூரப்பா ஆட்சிக்கு வந்த பிறகு கஜானாவில் பணம் இல்லை. சமுதாய பவன் கட்ட நிதி ஒதுக்குமாறு மந்திரி ஸ்ரீராமுலுவிடம் கேட்டேன். கஜானாவில் பணம் இல்லை என்று எடியூரப்பா கூறிவிட்டதாக சொல்கிறார். நான் நீண்ட காலமாக அரசியலில் இருக்கிறேன்.
தற்போது பா.ஜனதா ஆட்சியில் இருக்கும் சில மந்திரிகள் எனது பேச்சை கேட்கிறார்கள். அவர்களிடம் சொல்லி உங்களின் பணிகளை செய்து கொடுக்க முடியும். இந்த தொகுதிக்கு 7,000 வீடுகளை ஒதுக்குமாறு வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணாவிடம் கேட்டேன். நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று கூறிவிட்டார்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, தனது தொகுதியான பாதாமியில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-
ஏழை மக்கள் யாரும் உணவு இன்றி பசியால் வாடக்கூடாது. வயிறு நிறைய சாப்பிட வேண்டும். வெள்ளம், வறட்சி எது வந்தாலும் மக்கள் வயிறு நிறைய சாப்பிட்டு நிம்மதியாக இருக்க வேண்டும். நான் மீண்டும் முதல்-மந்திரி ஆனால் ஏழை மக்களுக்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்குவேன்.
நான் ஆட்சியில் இருந்த வரைக்கும் கஜானா நிரம்பியே இருந்தது. எடியூரப்பா ஆட்சிக்கு வந்த பிறகு கஜானாவில் பணம் இல்லை. சமுதாய பவன் கட்ட நிதி ஒதுக்குமாறு மந்திரி ஸ்ரீராமுலுவிடம் கேட்டேன். கஜானாவில் பணம் இல்லை என்று எடியூரப்பா கூறிவிட்டதாக சொல்கிறார். நான் நீண்ட காலமாக அரசியலில் இருக்கிறேன்.
தற்போது பா.ஜனதா ஆட்சியில் இருக்கும் சில மந்திரிகள் எனது பேச்சை கேட்கிறார்கள். அவர்களிடம் சொல்லி உங்களின் பணிகளை செய்து கொடுக்க முடியும். இந்த தொகுதிக்கு 7,000 வீடுகளை ஒதுக்குமாறு வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணாவிடம் கேட்டேன். நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று கூறிவிட்டார்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X