என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயிகளுக்கு மிகப்பெரிய அநீதி -பிரதமர் மோடி மீது சோனியா காந்தி சாடல்
Byமாலை மலர்2 Oct 2020 8:21 AM GMT (Updated: 2 Oct 2020 8:21 AM GMT)
பிரதமர் மோடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய அநீதி இழைத்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி:
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என்பதை மோடி அரசு உணர்ந்து செயல்பட வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளை ஆலோசிக்காமல் எந்தவொரு வேளாண் சட்டத்தையும் அமல்படுத்தியதில்லை.
ஆனால் மோடி தலைமையிலான அரசு விவசாயிகளை கலந்து ஆலோசிக்காமல் முதலாளிகளுக்காக சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
வேளாண சட்டங்களைத் திரும்ப பெறும் வரை விவசாயிகளுடன் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும். வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபிலிருந்து டெல்லி நோக்கி அக்டோபர் 3 முதல் 5-ஆம் தேதி வரை ராகுல்காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி நடைபெறும். இதில் பஞ்சாப் விவசாயிகள் மற்றும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X