என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகத்தில் மேலும் ஒரு மந்திரி, எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா
Byமாலை மலர்29 Sep 2020 2:39 AM GMT (Updated: 29 Sep 2020 2:39 AM GMT)
கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகள் 80-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு மந்திரி, எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
பெங்களூரு :
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், எம்.எல்.சி.க்கள் என 80-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் ஒரு மந்திரி, எம்.எல்.ஏ.வுக்கு, கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
அது பற்றிய விவரம் வருமாறு:-
துமகூரு மாவட்டம் சிக்க நாயக்கனஹள்ளி தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு தேர்வானவர் மாதுசாமி. இவர் எடியூரப்பாவின் மந்திரிசபையில் சட்டத்துறை மந்திரி ஆக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் மாதுசாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் கொரோனா பரிசோதனை செய்து இருந்தார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபோல கதக் டவுன் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எச்.கே.பட்டீல். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்ட அவர் கொரோனா பரிசோதனை செய்தார். இதில் அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் அவரும் டாக்டர்களின் அறிவுரையின் பேரில் 10 நாட்கள் விட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற உள்ளார். இவர் முன்னாள் மந்திரி ஆவார்.
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், எம்.எல்.சி.க்கள் என 80-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் ஒரு மந்திரி, எம்.எல்.ஏ.வுக்கு, கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
அது பற்றிய விவரம் வருமாறு:-
துமகூரு மாவட்டம் சிக்க நாயக்கனஹள்ளி தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு தேர்வானவர் மாதுசாமி. இவர் எடியூரப்பாவின் மந்திரிசபையில் சட்டத்துறை மந்திரி ஆக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் மாதுசாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் கொரோனா பரிசோதனை செய்து இருந்தார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபோல கதக் டவுன் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எச்.கே.பட்டீல். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்ட அவர் கொரோனா பரிசோதனை செய்தார். இதில் அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் அவரும் டாக்டர்களின் அறிவுரையின் பேரில் 10 நாட்கள் விட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற உள்ளார். இவர் முன்னாள் மந்திரி ஆவார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X