search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கேரளாவில் புதிய உச்சம் - ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா

    கேரளாவில் இன்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 6 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. 

    இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

    அந்த தகவலின் படி, மாநிலத்தில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 6 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இதனால் கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 67 ஆயிரத்து 939 ஆக அதிகரித்துள்ளது. 

    வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 678 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 199 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

    இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 530 ஆக அதிகரித்துள்ளது.

    ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 21 உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 656 ஆக அதிகரித்துள்ளது.

    Next Story
    ×