என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேளாண் மசோதாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு- பினராயி விஜயன் பேட்டி
Byமாலை மலர்24 Sep 2020 7:39 AM GMT (Updated: 24 Sep 2020 7:39 AM GMT)
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்றத்தில் வேளாண் மசோதாவை எதிர்த்த 8 எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த மசோதா அமலுக்கு வந்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
கடந்த 6 ஆண்டுகளில் 60 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 10,281 விவசாயிகள் இறந்துள்ளனர்.
வேளாண் மசோதா குறித்து மந்திரி சபை கூட்டத்தில் விவாதித்தோம். இது குறித்து சட்டநிபுணர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது.
அதன்அடிப்படையில் வேளாண் மசோதாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவது பற்றி முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X