search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    நேற்று அதிகபட்சமாக 12 லட்சம் சாம்பிள்கள் சோதனை- இந்தியாவில் கொரோனா பரிசோதனை 6.36 கோடியாக உயர்வு

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று அதிகபட்சமாக 12 லட்சத்திற்கும் அதிகமான சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 54 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தவண்ணம் உள்ளது. 

    இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 6.36 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 6,36,61,060 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், புதிய அதிகபட்ச அளவாக நேற்று 12,06,806 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
    Next Story
    ×