search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா பரிசோதனை"

    • காய்ச்சல், சளி, தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
    • தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும்.

    சென்னை:

    கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகம், தெலுங்கானா, கேரளத்தை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    கொரோனா பரவல் குறித்து மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத்துறை வழங்கியுள்ளது.

    குறிப்பாக, அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் அறிகுறிகள் உள்ளோருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்துமாறு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டார்.

    அதன்படி, தினமும் 350-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் யாருக்கு எல்லாம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தலை சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு செல்வவிநாயகம் வழங்கி உள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காய்ச்சல், சளி, தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோயாளிகள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

    தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தீவிர நுரையீரல் தொற்றுக்கு உள்ளானவர்கள், இன்புளூயன்சா போன்ற பாதிப்புக்குள்ளானவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்து வருகிறது.
    • கொரோனா பாதிப்பில் இருந்து 24 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    சென்னை:

    கொரோனா தொற்று கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் உகான் மாநிலத்தில் பரவி உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த தொற்று தமிழ்நாட்டில் 2020-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஊடுருவியது. இதனால், தமிழ்நாட்டில் பாதிப்பு அதிகரித்து வந்தது. அதன்பின், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தது. தொடர்ந்து, கொரோனாவிற்கு தடுப்பூசிகளும் கண்டுபிடிக்கப்பட்டு படிப்படியாக கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது.

    இதையடுத்து, மீண்டும் உருமாறிய புதிய வகை கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கேரளாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு வேகமாக பரவ தொடங்கியது.

    அதனை தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்து வருகிறது. ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. நீண்ட நாட்களாக கொரோனா பாதிப்பில் தமிழ்நாட்டில் எந்த உயிரிழப்பும் ஏற்படாமல் இருந்தது. இந்தநிலையில், நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி (வயது 55) என்பவர் உயிரிழந்தார்.

    தமிழ்நாட்டில் நேற்று 158 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னையில் 16 பேர், கோவையில் 3 பேர், நீலகிரி, ராணிப்பேட்டை, சேலம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 24 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது.

    மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • டெல்டா பிளஸ் மிக கொடூரமாக பலரது உயிரை பறித்தது.
    • டெல்டா வகை 8 உருமாற்றங்களை அடைந்தது.

    சென்னை:

    சீனாவில் உருவாகி உலகையே தடம்புரள செய்து விட்டது கொரோனா வைரஸ்.

    கடந்த 2018-ம் ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியது. 'சார்ஸ் கொரோனா வைரஸ்' எனப்படும் கொரோனா தொற்று பல உருமாற்றங்களை அடையக் கூடியது. 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகம் எடுத்து பரவியது.

    கொரோனா வைரஸ் சில வார இடைவெளிகளில் புதிய புதிய வடிவங்கள் எடுத்தது. காமா, பீட்டா, ஆல்பா, டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் என்று வகை வகையாக கொரோனா உருமாறியது. இதில் டெல்டா பிளஸ் மிக கொடூரமாக பலரது உயிரை பறித்தது.

    ஆல்பா வகை கொரோனா தீநுண்மி 2 உருமாற்றங்களை மட்டுமே பெற்றது. டெல்டா வகை 8 உருமாற்றங்களை அடைந்தது. இதற்கிடையே கொரோனா வைரஸ் ஓமைக்கரானாக மாறியது. இந்த ஓமைக்கரான் நூற்றுக்கும் மேற்பட்ட உருமாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.

    அந்த வரிசையில் ஓமைக்ரானின் உட்பிரிவான பிஏ 2.86 பைரோலா வைரசில் இருந்து புதிய வகை கொரோனா உருமாற்றம் அடைந்துள்ளது. அந்த புதிய வகை கொரோனா ஜே.என்.1 என்று அழைக்கப்படுகிறது.

    கொரோனா பெருந்தொற்றின் மீதான அச்சுறுத்தல் தொடர்ந்து உலகம் முழுக்க நிலைத்திருக்கும் என்பதை மீண்டும் காட்டும் வகையில் தற்போது புதிதாக உருவெடுத்திருக்கிறது ஜே.என்.1 வகை பாதிப்பு.

    இந்த புதிய கொரோனா முதலில் அமெரிக்காவில் கடந்த அக்டோபர் இறுதியில் கண்டறியப்பட்டது. இது தற்போது உலகில் உள்ள மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது.


    ஜே.என்.1 புதிய வவகை கொரோனா இந்தியாவிலும் பரவி இருக்கிறது. கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

    சிலரின் சளி மாதிரிகளை மரபணு பகுப் பாய்வுக்கு உட்படுத்தியதில் 63 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிக பட்சமாக கோவாவில் 34 பேருக்கும், அதற்கு அடுத்த படியாக மகாராஷ்டிராவில் 9 பேருக்கும், கர்நாடகாவில் 8 பேருக்கும் பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழ்நாட்டில் 4 பேருக்கு அத்தொற்று இருப்பதாக மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

    புதிய வகை கொரோனா பாதிப்பு இருந்தால் சில அறிகுறிகள் மூலம் கண்டு பிடித்துக் கொள்ளலாம். ஒருவருக்கு தொடர்ந்து சில தினங்கள் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, தலைவலி, சோர்வு, உடல்வலி, சுவாசிப்பதில் சிரமம், வயிற்றுப் போக்கு ஆகியவை இருந்தால் அது ஜே.என்.1 கொரோனா பாதிப்புக்கு அறிகுறிகளாக கருதப்படுகிறது.

    புதிய வகை கொரோனா தாக்கத்தில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை எளிதாக தற்காத்துக் கொள்ள முடியும். பொது இடங்களில் மற்றும் அதிக பேர் கூடும் பகுதிகளில் முகக் கவசம் அணிய வேண்டும். தனிநபர் இடைவெளி, கைகளை சோப்பு மூலம் கழுவுதல், இருமல், தும்மலின்போது வாய், மூக்கை மூடிக்கொள்ளுதல் அவசியமாகும்.

    இவை தவிர ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வகையில் ஊட்டச்சத்துமிக்க உணவுப் பழக்கத்தை மேற்கொள்வது நல்லது. மது, புகைப் பழக்கத்தைக் கைவிடுதல், உடற்பயிற்சி ஆகியவைகளை கடைபிடித்தால் ஜே.என்.1 புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    புதிய வகை கொரோனாவுக்கு தடுப்பூசி தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நூற்றுக்கணக்கான உருமாற்றங்களை பெற்று விட்டதால் ஏற்கனவே உள்ள தடுப்பூசிகள் ஜே.என்.1 வகைக்கு பலன் அளிக்காது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    அதே வேளையில் ஏற்கனவே தடுப்பூசி இரு தவணையும், பூஸ்டர் தவணையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு ஜே.என்.1 வகை தொற்று பாதித்தாலும், பாதிப்பு வீரியமாக இருக்காது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    புதிய வகை கொரோனாவான ஜே.என்.1 பற்றி சர்வதேச அளவில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டு விட்டன. உலக சுகாதார அமைப்பும் அதை பற்றி ஆய்வு செய்துள்ளது. இதன் மூலம் இந்த புதிய வைரஸ் வீரியமே இல்லாத ஒன்று என்று உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    சளி தொல்லை காய்ச்சலுடன் இந்த வைரஸ் விலகி சென்று விடும் என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். எனவே புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதை பற்றி மக்கள் எந்த வகையிலும் குழப்பமோ, பீதியோ அடைய தேவை இல்லை என்று மருத்துவர்கள் உறுதிப்பட தெரிவித்து உள்ளனர்.

    புதிய வகை கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள கவனமாக இருந்தால் போதும். ஜே.என்.1 ரக கொரோனா பாதித்தாலும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் புதிய வகை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவீதம் பேர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலையில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

    இணை நோய் இருப்பவர்களுக்கு மட்டுமே புதிய வகை கொரோனா வைரஸ் சற்று கூடுதல் உடல் வலியை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய நிலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருந்தால் போதுமானது.

    60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சளி, இருமல், ஜலதோஷம் ஏற்பட்டால் உடனடியாக அதை கவனித்து கொள்வது நல்லது.

    • பாதிக்கப்படுவோர் ஒரு வாரத்தில் முழுமையாக குணமடைந்து விடுகின்றனர்.
    • நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    இந்தியா உட்பட40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இந்த சூழலில் புதிய கொரோனா வைரஸ் பரவல் குறித்து மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் இந்திய கொரோனா மரபியல் கூட்ட மைப்பின் (இன்சா காக்) தலைவர் என்.கே.அரோரா கூறியதாவது:-

    இந்தியாவில் சுமார் 88 சதவீத மக்களுக்கு 2 தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட, இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பரவும் ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை. இந்த வகை கொரோனா வைரசால், காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, உடல்வலி உள்ளிட்ட பாதிப்புகள் மட்டுமே ஏற்படுகின்றன. பாதிக்கப்படுவோர் ஒரு வாரத்தில் முழுமையாக குணமடைந்து விடுகின்றனர். மருத்துவ மனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. உயிரிழப்பு, ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருக்கிறது.


    அதேநேரம், நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். எந்த வகையான கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதை கண்டறிய சளி மாதிரிகளை மரபணு ஆய்வுக்கு அனுப்பவேண்டும் என்று மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளோம். பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருந்தால் போதும். அச்சம்அடைய தேவையில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர் பூனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. தற்போது குளிர்காலம், பண்டிகை காலம் என்பதால் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

    இதன் காரணமாக ஜே.என்.1 வைரஸ் வேகமாக பரவுகிறது. இதன் வீரியம் குறைவாகவே உள்ளது. எனினும் வைரஸ் பரவலை தடுக்க அந்தந்த நாடுகளின் அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவைசேர்ந்த முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் வெளியிட்ட அறிக்கையில், 'குளிர்காலம் தொடங்கி உள்ளதால் ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் பரவல் சற்று அதிகரித்து உள்ளது. மக்கள் அச்சப்பட தேவையில்லை. எனினும், மூத்த குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். எக்ஸ் பி.பி.1 வகை வைரசுக்காக தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை ஜே.என்.1 வகை வைரஸ் பரவலை தடுப்பதற்கும் பயன்படுத்தலாம்' என்று தெரிவித்து உள்ளது.

    • கொரோனாவுக்கு கேரளாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • கடந்த நான்கு வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 52 சதவீதம் அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கேரளா, கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. கேரளாவில் 266 பேரும், கர்நாடகாவில் 70 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தள்ளது.

    கொரோனாவுக்கு கேரளாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,420 ஆக அதிகரித்துள்ளது.

    இதனிடையே, பாட்னா, கயா மற்றும் தர்பங்கா விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை அதிகரிக்குமாறு பீகார் அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

    கடந்த நான்கு வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 52 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் உலக அளவில் 8,50,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    • கொரோனா பாதிப்பில் இருந்து 6 பேர் குணமடைந்துள்ளனர்.
    • காய்ச்சல் பாதிப்புள்ள நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம்.

    சென்னை:

    கொரோனா வைரஸ் புதிது புதிதாக உருமாறிய கொரோனாவாக பொது மக்களை பாதித்து வருகிறது. இப்போது புதிய வகை கொரோனா கேரளாவில் திடீரென அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று 309 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    அதில் சென்னை மாவட்டத்தில் 4 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 3 பேருக்கும், சேலம், திருவள்ளூர், திருப்பூர் மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், செங்கல்பட்டு, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து 6 பேர் குணமடைந்துள்ளனர்.

    புதிய வகை கொரோனா குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    கேரளாவில் புதிய வகை கொரோனா பரவி வருவதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். இப்போதைக்கு அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று கட்டாயமில்லை.

    காய்ச்சல் பாதிப்புள்ள நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். தற்போது புதுவகை கொரோனா எந்த மாதிரி உருமாறி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதை ஆய்வு செய்து வருகின்றனர். இதன் முடிவு நாளை தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
    • காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவ மனைக்கு சென்று அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    நாட்டிலேயே அதிக அளவாக கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது ஆயிரத்தை தாண்டிவிட்டது. கொரோனா பரிசோதனை மாநிலத்தில் அதிக அளவில் செய்வதால் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

    மேலும் மக்களும் காய்ச்சலுக்காக தங்களை தாங்களே சுயமாக பரிசோதனை செய்வதால் கொரோனா பாதித்தவர்கள் பற்றிய விவரம் தெரியவருகிறது. மாநிலத்தில் இதுவரை 1324 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். மேலும் கொரோனாவிற்கு கோழிக்கோட்டை சேர்ந்த குமரன் (வயது 77) மற்றும் கண்ணூர் பானூரை சேர்ந்த அப்துல்லா (82) ஆகியோர் பரிதாபமாக இறந்துவிட்டனர்.

    இதனைத்தொடர்ந்து வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவ மனைக்கு சென்று அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

    • புதிய வகை கொரோனா பரவுவதை தொடர்ந்து மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.
    • கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோருக்கு மரபணு பரிசோதனை செய்யப்படும்.

    சென்னை:

    அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது உலக நாடுகளை அச்சமடைய செய்துள்ளது. 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவின் தாக்கத்தில் இருந்து படிப்படியாக விடுபட்டு வரும் நிலையில் தற்போது புதிய வகை கொரோனா பரவுவதை தொடர்ந்து மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.

    நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்துள்ள நிலையில் புதிய வகை கொரோனா தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசித்தனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் புதிய வகை கொரோனா குறித்து எடுக்கப்பட்டு உள்ள சுகாதார நடவடிக்கைகள் குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

    தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு இல்லை. சுகாதாரத் துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. கொரோனா பாதிப்பு கூட 1,2 கேஸ்கள்தான் வருகிறது.

    அனைத்து மாவட்டத்திலும் ஏதாவது மாறுபாடான கேஸ் வருகிறதா என்பதை கண்காணித்து தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    தீவிரமான தாக்கம் எதுவும் இல்லை. மத்திய சுகாதாரத் துறை இதுபற்றி வேறு எந்த வழிகாட்டுதலையும் தெரிவிக்கவில்லை. கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோருக்கு மரபணு பரிசோதனை செய்யப்படும். அதில் எதுவும் மாற்றம் உள்ளதா? என ஆய்வு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும், அவ்வப்போது தொற்று உருமாறி புதுப்புது வடிவங்களில் பரவுகிறது.
    • ஒரு சில வாரங்களிலேயே தொற்று பரவல் மீண்டும் குறைய தொடங்கி விட்டது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும், அவ்வப்போது தொற்று உருமாறி புதுப்புது வடிவங்களில் பரவுகிறது.

    கடந்த பிப்ரவரி வரை மிகவும் குறைந்திருந்த தொற்று பரவல், மார்ச் மாதத்தில் இருந்து சற்று அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக கேரளா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் குழந்தைகள், வயதானவர்களுக்கு தொற்று பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்டது.

    ஆனாலும் பாதிப்பு தீவிரமாக இல்லை. இதனால் ஒரு சில வாரங்களிலேயே தொற்று பரவல் மீண்டும் குறைய தொடங்கி விட்டது.

    இந்நிலையில் கேரளாவில் தொற்று பாதித்த பெரியவர்கள் சிலருக்கு மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் அவர்கள் கான்ஜூன்க்டிவிடிஸ் எனப்படும் ஒரு வித கண் நோயால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

    அதாவது தொற்று பாதித்தவர்களுக்கு கண் இளஞ்சிவப்பாக மாறுகிறதாம். இது கண்ணின் வெள்ளைப்பகுதியையும், கண் இமையின் உட்புறத்தையும் வரிசைப்படுத்தும் மெல்லிய அடுக்காகும்.

    இதுகுறித்து கோழிக்கோட்டில் உள்ள கிரிட்டிக்கல் கேர் மெடிசினின் மூத்த ஆலோசகர் டாக்டர் அணுக்குமார் கூறுகையில், இதற்கு முன்பு இதுபோன்ற அறிகுறிகள் காணப்படவில்லை. தொற்றால் பாதிக்கப்படுவர்களில் 60 சதவீதம் பேருக்கு தொண்டை வலியும் இருந்தது.

    இதுதவிர நோயாளிகளுக்கு காய்ச்சலும் இருந்தது. ஆனால் இந்த அறிகுறிகள் அனைத்துமே லேசானது முதல் மிதமானது தான். பாதிப்பு தீவிரமாக இல்லை என்றார்.

    இதற்கிடையே கொரோனாவின் உட்பிரிவான எக்ஸ். பிபி.1.16 வகை தொற்று ஏற்கனவே பரவி வரும் நிலையில் தற்போது புதிய வகை தொற்றான எக்ஸ்.பிபி.2.3 என்ற புதிய வகை உட்பிரிவு கண்டறியப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1,300 மாதிரிகளில் நடத்தப்பட்ட மரபு சங்கிலி தொடர் பரிசோதனையில் இந்த புதிய வகை உட்பிரிவு கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது கோடை மழை பெய்து இதமான சீதோசனம் நிலவி வருகிறது.
    • வெளிநாட்டவரும் கோடைகாலத்தை கொண்டாடும் விதமாக கொடைக்கானலுக்கு வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது கோடை மழை பெய்து இதமான சீதோசனம் நிலவி வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இங்குள்ள பெரும்பாலான நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அடர்ந்த வனப்பகுதியில் எங்கும் பச்சைபசேல் என காணப்படும் புல்வெளிகளும் கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது. வெளிநாட்டவரும் கோடைகாலத்தை கொண்டாடும் விதமாக கொடைக்கானலுக்கு வருகின்றனர்.

    இதனால் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று ஓய்ந்த நிலையில் கடந்த சில நாட்களாக நாடுமுழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது வரை 73 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளியூர்களில் இருந்து கொடைக்கானலுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கொடைக்கானல் நகர் நுழைவுவாயில் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி அருகே சுழற்சி முறையில் பயணிகளிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் சுற்றுலா பயணிகள் 2 தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி உள்ளனரா? என சுகாதாரத்துறையினர் சோதனை செய்கின்றனர். பொது இடங்கள், சுற்றுலா தலங்களில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதால் முககவசம் அணிய வேண்டும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • திருச்சி மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
    • பரிசோதனை கூடத்தில் தயாராக உள்ள 4 ஆர்.டி.பி.சி.ஆர். எந்திரங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரத்த, சளி மாதிரிகள் பரிசோதனை செய்ய முடியும்

    திருச்சி:

    தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கத் தொடங்கி உள்ளது. சென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

    திருச்சியில் தினசரி பரிசோதனைகள் ஒன்று அல்லது இரண்டு பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் 7 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றும் 5 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    திருச்சியை உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 18 வயது இளம்பெண் கொரோனா வைரஸ் வைரசுக்கு நேற்று முன்தினம் பலியாகியுள்ளார்.

    சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் காரணத்தினால் அங்கு பரிசோதனைகளை அதிகரிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

    தற்போது பாதிப்பு வேகமெடுத்து உள்ளதால் பரிசோதனைகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி திருச்சி மருத்துவக் கல்லூரி புதிய டீன் நேரு என்று கூறும் போது, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுண்ணுயிரியல் துறை சார்பில், இதுவரை 16 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 57 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இந்த பரிசோதனை கூடத்தில் 4 ஆர்.டி.பி.சி.ஆர். எந்திரங்கள் தயாராக உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரத்த, சளி மாதிரிகள் பரிசோதனை செய்ய முடியும்.

    தற்போது வைரஸ் கட்டுக்குள் இருப்பதால் சந்தேகப்படும்படியான நபர்களுக்கு மட்டும் 500 முதல் 600 பேருக்கு பரிசோதனைகள் நடந்து வருகின்றன.

    சென்னையைப் போன்று திருச்சியில் இதுவரை குறிப்பிட்ட பகுதியில் அதிகம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

    இருப்பினும் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம். தேவைப்பட்டால் தினசரி பரிசோதனை அதிகரிக்கப்படும் என்றார்.


    • கொரோனா தினசரி பாதிப்பானது தற்போது இரட்டை இலக்கத்திற்கு மாறி உள்ளது.
    • தடுப்பூசி செலுத்தாமல் உள்ள நபர்கள் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    கோவை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.

    கோவை மாவட்டத்தில் கடந்த வாரங்களில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா தினசரி பாதிப்பானது தற்போது இரட்டை இலக்கத்திற்கு மாறி உள்ளது.

    தினமும் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால், மாவட்டம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், முக கவசம் அணியவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்திவருகின்றனர்.

    அடுத்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இதைய டுத்து, கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரங்களில் தினமும் 300 முதல் 400 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப் பட்டு வந்தது. ஆனால், தற்போது 600 முதல் 700 பேர் வரை பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறிய தாவது:- கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. தற்போது பள்ளிகளும் திறக்கப்ப ட்டுள்ளது. பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தாமல் உள்ள நபர்கள் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவு றுத்தப்பட்டு வருகிறது.

    ஆஸ்பத்திரிகளில் கொரோனா பரிசோத னைகளை அதிகரிக்க உத்தரவிட ப்பட்டுள்ளது. அதன்படி, ஆஸ்பத்திரிகளில் கொரோனா அறிகுறி காணப்படும் நபர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோத னையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தற்போது தினமும் 600 முதல் 700 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

    இவர்களின் பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் உத்தரவின் பேரில் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலை தடுக்க பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.பொது இடங்கள் மற்றும் கூட்ட மாக உள்ள இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிவது, சமூக இடை வெளியை கடைப்பிடித் தல் போன்ற தடுப்பு நடவடிக்வேகைகளை மேற்ெகாள்ள வேண்டும்.

    குறிப்பாக, வழிபாட்டு தலங்கள், வணிக வளா கங்கள், தியேட்டர்கள், மார்க்கெட்டுகள், ஆஸ்பத்தி ரிகளுக்கு செல்லும் போது முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    ×