search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    கொரோனா பாதிப்பில் 2-வது இடம் பிடித்த ஆந்திர மாநிலம்

    நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த தமிழகத்தை பின்னுக்கு தள்ளி ஆந்திரா 2-வது இடத்தை பிடித்துள்ளது.
    விஜயவாடா:

    ஆந்திராவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 5 நாட்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது.

    அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 10 ஆயிரத்து 603 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 24 ஆயிரத்து 667 ஆக அதிகரித்துள்ளது.

    இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த தமிழகத்தை பின்னுக்கு தள்ளி ஆந்திரா 2-வது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 88 பேர் கொரோனாவுக்கு பலியானதன் மூலம் அங்கு மொத்த பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×