என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெலுங்கானாவில் கன மழை - வெள்ளம் கவலையடையச் செய்துள்ளது - தமிழிசை டுவிட்
Byமாலை மலர்17 Aug 2020 7:13 AM GMT (Updated: 17 Aug 2020 7:13 AM GMT)
தெலுங்கானா மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் தம்மை கவலையடையச் செய்துள்ளதாக, அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்:
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்தநிலையில் தெலுங்கானாவின் சில பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த கன மழை காரணமாக ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் தெலுங்கானா மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் தம்மை கவலையடையச் செய்துள்ளதாக, அம்மாநில ஆளுநர் தமிழிசைசவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, என்.டி.ஆர்.எஃப் உள்ளிட்ட மீட்பு படையினர் மீட்டு வருவதாக தமது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தின் தன்னார்வலர்கள், நிவாரண உதவிகளில் ஈடுபடுமாறு, ஆளுநர் தமிழிசைசவுந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X