என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜிவ் தியாகி மரணம் - ராகுல், பிரியங்கா இரங்கல்
Byமாலை மலர்12 Aug 2020 9:19 PM GMT (Updated: 12 Aug 2020 9:19 PM GMT)
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜிவ் தியாகி மரணத்துக்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜிவ் தியாகி மாரடைப்பால் நேற்று காலமானார். டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பங்கேற்றார். அதன்பின், வீட்டில் ஓய்வு எடுத்த போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால் அவர் காசியாபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
இந்நிலையில், ராஜிவ் தியாகியின் மரணத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், காங்கிரஸ் கட்சி தன் சிங்கங்களில் ஒன்றை இழந்து விட்டது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், ராஜிவ் தியாகியின் மரணத்துக்கு மபி முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X