search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்
    X
    கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்

    கேரளாவின் இடுக்கி, மலப்புரம், வயநாடு பகுதிகளுக்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை மையம்

    கேரளாவின் இடுக்கி, மலப்புரம், வயநாடு பகுதிகளுக்கு ஆகஸ்டு 11-ம் தேதி வரை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    தென்மேற்கு பருவமழை பருவமழை காரணமாக கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தற்போது வயநாடு, இடுக்கி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

    இந்நிலையில், கேரளாவில் உள்ள இடுக்கி, மலப்புரம், வயநாடு ஆகிய பகுதிகளுக்கு ஆகஸ்டு 11-ம் தேதி வரை இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து இந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×