என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அயோத்தி ராமர் கோவில் விவகாரம் : இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் - பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
Byமாலை மலர்7 Aug 2020 12:29 AM GMT (Updated: 7 Aug 2020 12:29 AM GMT)
இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதையும், மதரீதியாக தூண்டிவிடுவதையும் பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும் என வெளியுறவுத் துறை செயலாளர் அனுராக் தெரிவித்தார்.
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து அங்கு ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி நேற்று முன்தினம் அடிக்கல் நாட்டினார். பூமி பூஜை விழா கோலாகலமாக நடந்து முடிந்தது.
இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அயோத்தியில் கோவில் கட்ட இந்திய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து வழங்கிய தீர்ப்பு குறைபாடு உடையது என்றும், நீதியை விட நம்பிக்கையை பிரதிபலிப்பதாக உள்ளது என்றும், இந்தியாவில் பெரும்பான்மையினரின் ஆதிக்கம் ஓங்கி வருவதாகவும் கூறி இருந்தது. அத்துடன் சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் அதில் குறிப்பிட்டு இருந்தது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவாவிடம் நேற்று நிருபர்கள் கருத்து கேட்டனர்.
அப்போது பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவர் கூறியதாவது:-
இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை குறித்து பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையை பார்த்தோம். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தூண்டி விடும் பாகிஸ்தானின் இந்த கருத்து ஆச்சரியம் அளிப்பதாக இல்லை. தனது நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு உரிமைகள் வழங்க மறுக்கும் பாகிஸ்தான் இவ்வாறு கூறுவது மிகுந்த வருத்தம் அளிப்பதாக உள்ளது.
இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதையும், மதரீதியாக தூண்டிவிடுவதையும் பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து அங்கு ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி நேற்று முன்தினம் அடிக்கல் நாட்டினார். பூமி பூஜை விழா கோலாகலமாக நடந்து முடிந்தது.
இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அயோத்தியில் கோவில் கட்ட இந்திய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து வழங்கிய தீர்ப்பு குறைபாடு உடையது என்றும், நீதியை விட நம்பிக்கையை பிரதிபலிப்பதாக உள்ளது என்றும், இந்தியாவில் பெரும்பான்மையினரின் ஆதிக்கம் ஓங்கி வருவதாகவும் கூறி இருந்தது. அத்துடன் சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் அதில் குறிப்பிட்டு இருந்தது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவாவிடம் நேற்று நிருபர்கள் கருத்து கேட்டனர்.
அப்போது பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவர் கூறியதாவது:-
இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை குறித்து பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையை பார்த்தோம். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தூண்டி விடும் பாகிஸ்தானின் இந்த கருத்து ஆச்சரியம் அளிப்பதாக இல்லை. தனது நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு உரிமைகள் வழங்க மறுக்கும் பாகிஸ்தான் இவ்வாறு கூறுவது மிகுந்த வருத்தம் அளிப்பதாக உள்ளது.
இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதையும், மதரீதியாக தூண்டிவிடுவதையும் பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X