search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை நிலவரம்
    X
    வானிலை நிலவரம்

    வங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

    வங்கக்கடலில் மீண்டும் 9ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய வானிலை மையம் கூறியிருப்பதாவது:

    வங்கக்கடலில் மீண்டும் 9ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

    புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியில் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ரெட் அலர்ட் விட வாய்ப்பு உள்ளது.

    கடந்த 4ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து 2 நாளில் வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×