என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகத்தில் ஒரே நாளில் 98 பேர் பலி - புதிதாக 4,752 பேருக்கு வைரஸ் தொற்று
Byமாலை மலர்3 Aug 2020 3:43 PM GMT (Updated: 3 Aug 2020 3:43 PM GMT)
கர்நாடகத்தில் ஒரே நாளில் 98 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், புதிதாக 4,752 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு :
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரசால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா பாதிப்பு இதுவரை 1 லட்சத்து 34 ஆயிரத்து 819 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
கர்நாடகாவில் இன்று மேலும் 4,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,39,571 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 98 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 2,594 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இன்று 4,776 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 62,500 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் தற்போது வரை 74,469 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த இரு தினங்களாக 5 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு இன்று 4 ஆயிரத்திற்கு குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரசால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா பாதிப்பு இதுவரை 1 லட்சத்து 34 ஆயிரத்து 819 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
கர்நாடகாவில் இன்று மேலும் 4,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,39,571 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 98 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 2,594 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இன்று 4,776 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 62,500 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் தற்போது வரை 74,469 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த இரு தினங்களாக 5 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு இன்று 4 ஆயிரத்திற்கு குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X