search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு
    X
    கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு

    ஒரே நாளில் 5,483 பேருக்கு வைரஸ் தொற்று: கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 1¼ லட்சத்தை நெருங்கியது

    கர்நாடகத்தில் ஒரே நாளில் 5,483 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1¼ லட்சத்தை நெருங்கி உள்ளது. மேலும் கொரோனாவுக்கு 84 பேர் உயிரிழந்துள்ளனர்.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவுவது தொடர்ந்து அதிகரித்து கொண்டே சென்ற வண்ணம் உள்ளது. கடந்த சில நாட்களாக சராசரியாக 5 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 6 ஆயிரத்தை தாண்டியது. கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 18 ஆயிரத்து 632 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். மேலும் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி 2,238 பேர் பலியாகி இருந்தனர்.

    இந்த நிலையில், கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 84 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கர்நாடகத்தில் ஏற்கனவே 1 லட்சத்து 18 ஆயிரத்து 632 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 5,483 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து 115 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 49 ஆயிரத்து 788 பேர் மீண்டுள்ளனர். இதில், நேற்று மட்டும் 3,130 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் 72 ஆயிரத்து 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதிதாக பெங்களூரு நகரில் 2,220 பேருக்கும், மைசூருவில் 204 பேருக்கும், கலபுரகியில் 144 பேருக்கும், தார்வாரில் 180 பேருக்கும், பல்லாரியில் 340 பேருக்கும், கொப்பலில் 38 பேருக்கும், தட்சிணகன்னடாவில் 204 பேருக்கும், பாகல்கோட்டையில் 88 பேருக்கும், உடுப்பியில் 213 பேருக்கும், உத்தரகன்னடாவில் 92 பேருக்கும், பெலகாவியில் 217 பேருக்கும், விஜயாப்புராவில் 118 பேருக்கும், துமகூருவில் 95 பேருக்கும், மண்டியாவில் 65 பேருக்கும், ராய்ச்சூரில் 119 பேருக்கும், பீதரில் 104 பேருக்கும், தாவணகெரேயில் 122 பேருக்கும், பெங்களூரு புறநகரில் 105 பேருக்கும், சிக்பள்ளாப்பூரில் 48 பேருக் கும், கோலாரில் 32 பேருக்கும், சிவமொக்காவில் 158 பேருக்கும், குடகில் 30 பேருக்கும், சித்ரதுர்காவில் 35 பேருக்கும், சாம்ராஜ்நகரில் 44 பேருக்கும், ஹாசனில் 100 பேருக்கும், சிக்கமகளூருவில் 74 பேருக்கும், யாதகிரியில் 56 பேருக்கும், ராமநகரில் 89 பேருக்கும், ஹாவேரியில் 57 பேருக்கும், கதக்கில் 92 பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

    மேலும் கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 84 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 2,322 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூருவில் மட்டும் 20 பேரும், தட்சிண கன்னடாவில் 10 பேரும், தார்வாரில் 7 பேரும், கலபுரகியில் 6 பேரும், பெலகாவி, மைசூரு, விஜயாப்புராவில் தலா 5 பேரும், கதக், குடகில் தலா 3 பேரும், சிவமொக்கா, துமகூருவில் தலா 4 பேரும், தாவணகெரே, ராய்ச்சூர், பீதரில் தலா 2 பேரும், ஹாசன், உத்தரகன்னடா, ராமநகர், பாகல்கோட்டை, யாதகிரி, சாம்ராஜ்நகரில் தலா ஒருவரும் பலியாகி உள்ளனர்.

    பெங்களூருவில் மட்டும் 55 ஆயிரத்து 544 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுபோல, பெங்களூருவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் ஒட்டு மொத்தமாக 1,029 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×