search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    டெல்லியில் இன்று 1,349 பேருக்கு கொரோனா தொற்று

    டெல்லியில் ஒரே நாளில் 1,349 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்தை கடந்தது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மேற்கு வங்காளம், பீகார், கர்நாடகா போன்ற மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா தொற்று அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

    இதனால் இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 30 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் இருந்தது. இதுவரை 7,24,578 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4,02,529 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் டெல்லியில் இன்று 1,349 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதனால் மொத்த எண்ணிக்கை, 1,25,096 ஆக உயர்ந்து உள்ளது.  கொரோனா தொற்று காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,690 ஆக உள்ளது.   15,288 பேர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
    Next Story
    ×