என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்றப்பட்ட ரெயில் பெட்டிகள் குவிப்பு
Byமாலை மலர்1 Jun 2020 11:40 AM GMT (Updated: 1 Jun 2020 11:40 AM GMT)
டெல்லி அரசின் வேண்டுகோளை ஏற்று தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்றப்பட்ட ரெயில் பெட்டிகளை அனுப்பி வைத்துள்ளது ரெயில்வே வாரியம்.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது வரை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இன்றில் இருந்து ஏராளமான தளர்வுகள் அளிக்கப்பட்டதால் நோயின் தாக்கம் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையில் நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களை தனி்மைப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. மேலும், நோய் அறிகுறி இல்லாமலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது.
அதன்படி ஏ.சி. அல்லாத 160 படுக்கைகள் கொண்ட 10 பெட்டிகளை தனிப்படுத்துவதற்காகவும், சுகாதாரப் பணியாளர்களுக்காக ஏ.சி. வசதி கொண்ட ஒரு பெட்டியையும் ரெயில்வே வாரியம் டெல்லியில் குவித்துள்ளது.
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக டெல்லி ரெயில் பெட்டிகளை கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றில் இருந்து ஏராளமான தளர்வுகள் அளிக்கப்பட்டதால் நோயின் தாக்கம் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையில் நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களை தனி்மைப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. மேலும், நோய் அறிகுறி இல்லாமலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது.
ஏற்கனவே, ரெயில்வே வாரியம் இதற்கென ரெயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்படும் வார்டாக மாற்றி வைத்திருந்தது. தற்போது அந்த ரெயில் பெட்டிகளை டெல்லிக்கு அனுப்பி வைக்க அம்மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதன்படி ஏ.சி. அல்லாத 160 படுக்கைகள் கொண்ட 10 பெட்டிகளை தனிப்படுத்துவதற்காகவும், சுகாதாரப் பணியாளர்களுக்காக ஏ.சி. வசதி கொண்ட ஒரு பெட்டியையும் ரெயில்வே வாரியம் டெல்லியில் குவித்துள்ளது.
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக டெல்லி ரெயில் பெட்டிகளை கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X