search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ விபத்து
    X
    தீ விபத்து

    டெல்லியில் 2 இடங்களில் தீ விபத்து - 250 குடிசைகள் எரிந்து சாம்பல்

    டெல்லியில் 2 இடங்களில் நிகழ்ந்த தீ விபத்தில் சுமார் 250 குடிசைகள் தீயில் எரிந்து சாம்பலாகின.
    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று அதிகாலை 2 இடங்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    முதலில் டெல்லி வடமேற்கு பகுதியில் உள்ள கேசவபுரத்தில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. அந்த தொழிற்சாலை முற்றிலுமாக பற்றி எரிந்தது.

    இதை அறிந்ததும் 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் அங்கு சென்று தீயை அணைத்தனர். அந்த தொழிற்சாலையில் எப்படி தீப்பிடித்தது என்று விசாரணை நடந்து வருகிறது.

    இதற்கிடையே டெல்லி துக்ளக்பாத் பகுதியில் உள்ள குடிசைகளிலும் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. நேற்று நள்ளிரவில் மக்கள் அயர்ந்து தூங்கிகொண்டிருந்த நிலையில் ஒரு குடிசையில் ஏற்பட்ட தீ மளமளவென மற்ற குடிசைகளுக்கும் பரவியது.

    இதனால் குடிசையில் தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறி அடித்தபடி வெளியேறினார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். 28 வண்டிகளில் வந்த அவர்கள் அந்த குடிசை பகுதி முழுவதும் பரவிய தீயை அணைத்தனர்.

    என்றாலும் சுமார் 250 குடிசைகள் தீயில் எரிந்து சாம்பலாகி விட்டன. இன்று அதிகாலை தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
    Next Story
    ×