என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வயநாட்டில் மாஸ்க் அணியாவிட்டால் 5000 ரூபாய் அபராதம்
Byமாலை மலர்29 April 2020 10:31 AM GMT (Updated: 29 April 2020 10:31 AM GMT)
கேரள மாநிலம் வயநாட்டில் மாஸ்க் அணியாவிட்டால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வயநாடு:
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, பொதுமக்கள் வெளியில் வரும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த விதிமுறையை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஊரடகு விதிமுறைகளை மீறுவோர் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
இந்நிலையில், கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பொது இடங்களுக்கு வரும் மக்கள் மாஸ்க் அணியாவிட்டால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு இளங்கோ கூறி உள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘மாஸ்க் அணியத் தவறும் நபர்கள் மீது கேரள காவல் சட்டம் 118இ-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். 5000 ரூபாய் அபராதம் விசூலிக்கப்படும். குற்றம்சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர விரும்பினால், சட்டத்தின் படி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X