search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு பணியில் வீரர்கள்
    X
    பாதுகாப்பு பணியில் வீரர்கள்

    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

    ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷ்ட்வார் மாவட்டத்தில் டாசன் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்தப் பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுடத் தொடங்கினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர்.

    இந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.

    பயங்கரவாதிகள் ஊடுருவலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
    Next Story
    ×