என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா வைரஸ் எதிரொலி -காங்கிரஸ் முதல் மந்திரிகளுக்கு சோனியா காந்தி கடிதம்
Byமாலை மலர்6 March 2020 1:54 PM GMT (Updated: 6 March 2020 1:54 PM GMT)
கொரோனா தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகளுக்கு அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கி உள்ளது. எனவே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நோய் மேலும் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான தடுப்பு மருந்துகள், உபகரணங்கள் அனைத்தும் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று மத்திய ரசாயன மந்திரி சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகளுக்கு அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும். தங்கள் கடமையை திறம்பட நிறைவேற்ற மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X