என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநிலங்களவையை தொடர்ந்து மக்களவையும் 11-ம் தேதி வரை ஒத்திவைப்பு
Byமாலை மலர்6 March 2020 9:55 AM GMT (Updated: 6 March 2020 9:55 AM GMT)
காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் அமளியால் மாநிலங்களவையை தொடர்ந்து மக்களவையும் 11ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:
டெல்லி வன்முறை தொடர்பாக பாராளுமன்றத்தில் உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என்றும், வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 5வது நாளாக இன்றும் பாராளுமன்றம் முடங்கியது.
மாநிலங்களவையில் இன்று டெல்லி வன்முறை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பியதால் 11-ம் தேதி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல், மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்தும், டெல்லி வன்முறை தொடர்பாகவும் அக்கட்சி உறுப்பினர்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் முதலில் மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை கூடியபோதும், காங்கிரஸ் உறுப்பினர்களின் அமளி நீடித்தது. இதனால், மக்களவை 11-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இனி ஹோலி பண்டிகை முடிந்து 11ம் தேதி காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடும். அப்போது, டெல்லி வன்முறை தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X