search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்க்கட்சிகள் அமளி"

    கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுக்கான ரோஸ்டர் முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நான்காவது நாளாக மாநிலங்களவை இன்றும் முடங்கியது. #BudgetSession #Budget2019 #RajyaSabha
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். மறுநாள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. திங்கட்கிழமையில் இருந்து ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, கடந்த மூன்று நாட்களாக  எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.  

    இந்நிலையில், இன்று காலை பாராளுமன்றம் கூடியது. மாநிலங்களவையில் அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுக்கான ரோஸ்டர் முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர்.  எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.



    2 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது. காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்.பி.க்கள் மீண்டும் கோஷங்கள் எழுப்பினர்.

    உறுப்பினர்களை அமைதி காக்கும்படி மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார். ஆனால் உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக தொடர்ந்து கோஷமிட்டனர். இதனால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவை நான்காவது நாளாக இன்றும் முடங்கியது. #BudgetSession #Budget2019 #RajyaSabha
    குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மூன்றாவது நாளாக மாநிலங்களவை முடங்கியது. #BudgetSession #Budget2019 #RajyaSabha
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். மறுநாள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. திங்கட்கிழமையில் இருந்து ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், இன்று காலை பாராளுமன்றம் கூடியது. அப்போது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிஜு ஜனதா தளம் எம்பி லாடு கிஷோர் ஸ்வெயின் (வயது 71) மறைவுக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். இதையடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    மாநிலங்களவையில் அவை நடவடிக்கைகள் தொடங்கியதும், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, தேசிய குடிமக்கள் பதிவேடு, கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுக்கான ரோஸ்டர் முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். 

    தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. உள்துறை மந்திரி பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பிக்கள் வலியுறுத்தினர்.  உறுப்பினர்களின் அமளி காரணமாக 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    2 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது. ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் கோரிக்கைகளை முன்வைத்து அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கங்கள் எழுப்பினர். 

    உறுப்பினர்களை அமைதி காக்கும்படி துணை சபாநாயகர் ஹரிஷ்வன்ஷ் கேட்டுக்கொண்டார். ஆனால் உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக தொடர்ந்து கோஷமிட்டனர். இதனால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, நாளை காலை 11 மணி வரை அவையை ஒத்திவைப்பதாக துணை சபாநாயகர் அறிவித்தார். இதன்மூலம் தொடர்ந்து 3 நாட்கள் மாநிலங்களவை முடங்கி உள்ளது. 

    நாளை நடைபெற உள்ள கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது தொடர்ந்து விவாதம் நடைபெறும் என தெரிகிறது. விவாதத்திற்கு பிறகு பிரதமர் மோடி பதிலளித்து உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. #BudgetSession #Budget2019 #RajyaSabha
    எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் அமளி காரணமாக மாநிலங்களவை இன்று ஒத்திவைக்கப்பட்டது. இனி கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து 27ம் தேதி மாநிலங்களவை கூடும். #RajyaSabhaAdjourned #ChristmasHolidays
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    எம்.பி.க்கள் பலர் பாராளுமன்ற வளாகத்திலும் கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    மாநிலங்களவை இன்று காலை கூடியது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுந்து நின்று காஷ்மீரில் கவர்னர் ஆட்சி நடப்பதை கண்டித்துக் கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் மதியம் வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    இதற்கிடையே, நாட்டில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணித்து தகவல்களை ஆய்வு செய்ய 10 அமைப்புகளுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.


     
    இந்நிலையில், மாநிலங்களவை இன்று மதியம் மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஐ டி தொடர்பான அறிவிக்கையை கண்டித்து கோஷங்க்ள் எழுப்பினர். தொடர்ந்து அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.

    இதைத்தொடர்ந்து, மாநிலங்களவையை சபாநாயகர் நாள் முழுவதும் அவையை ஒத்திவைத்தார்.

    வார இறுதி நாட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறை நாட்கள் என தொடர்ந்து 5 நாட்கள் மாநிலங்களவை செயல்படாது. இனி டிசம்பர் 27-ம் தேதி மக்களவை கூடும். #RajyaSabhaAdjourned #ChristmasHoliday
    மேகதாது விவகாரம், ரபேல் ஒப்பந்த ஊழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #LSAdjourned
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் தற்போதைய எம்பிக்கள், முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது பாராளுமன்ற இரு அவைகளிலும் அதிமுக உறுப்பினர்கள் மேகதாது விவகாரத்தை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். மேகதாது விவகாரம் தொடர்பாக முதலில் விவாதிக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். அமளி நீடித்ததால் அவையை நடத்த முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது.



    மக்களவையில் அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.  இதேபோல் ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல், ராமர் கோவில், விசாகப்பட்டினம் ரெயில்வே மண்டலம் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி காங்கிரஸ், சிவசேனா மற்றும் தெலுங்குதேசம் கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டனர்.

    ஒரு கட்டத்தில் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கமிட்டனர். உறுப்பினர்களை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சமாதானம் செய்தார். ஆனாலும் அமளி நீடித்தது. இதையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். #WinterSession #LSAdjourned
    அசாம் மாநில குடிமக்கள் பட்டியல் தொடர்பாக பாராளுமன்றத்தில் காங்கிரஸ், திரிணாமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்றும் ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabhaadjourned #AssamNRC
    புதுடெல்லி:

    அசாம் மாநிலத்தில் அசாமியர்களுடன், வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களும் பெரும் அளவில் வசிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் யார் அசாமியர், யார் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதை அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அசாமில் தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு தயாரிக்கப்பட்டு இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. இதில் இந்தியர்களின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
     
    இந்த விவகாரம் தொடர்பாக கடந்த இரு தினங்களாக பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.



    நேற்றைய கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் அசாம் தேசிய மக்கள் பதிவேடு தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். இருப்பினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ராஜ்நாத் சிங் பேச எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டு மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை நாள் முழுவதும் முடங்கியது.

    இந்நிலையில், அசாம் மாநில குடிமக்கள் பட்டியல் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்றும் ஒத்திவைக்கப்பட்டது.

    அசாம் தேசிய மக்கள் பதிவேடு தொடர்பாக மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். #RajyaSabhaadjourned  #AssamNRC
    மக்களவையில் இன்று எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், என்ஆர்சி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். #NRCIssue #SCSTAct #LokSabhaProtests
    புதுடெல்லி:

    மக்களவை இன்று கூடியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலிமைப்படுத்தும் சட்டத்திருத்த மசோதாவை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார். அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) வரைவு பட்டியல் வெளியான பிறகு, வங்கதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு தொந்தரவு கொடுக்கப்படுவதாகவும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுகதா ராய் வலியுறுத்தினார். இதேபோல் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தெலுங்குதேசம் கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர்.



    இப்படி பல்வேறு விவகாரங்களை முன்வைத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது. எனினும், கேள்வி நேரத்தை ஒத்திவைக்க மறுத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அவையை தொடர்ந்து நடத்தினார்.

    இதனால் அதிருப்தி அடைந்த உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் அவர்களை அமைதியாகச் சென்று தங்கள் இருக்கைகளில் அமரும்படி சபாநாயகர் கேட்டுக்கொண்டார். ஜீரோ அவரில் அனைத்து கட்சிகளுக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். அதன்பிறகு உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளுக்கு திரும்பினர். #NRCIssue #SCSTAct #LokSabhaProtests
    ×