என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாற்றுத்திறனாளி அக்காளை கவனிக்க படிப்பை பாதியில் நிறுத்திய சிறுவன்
Byமாலை மலர்29 Feb 2020 3:17 AM GMT (Updated: 29 Feb 2020 3:17 AM GMT)
தாய்-தந்தை அடுத்தடுத்து உயிரிழந்ததால் ஆதரவற்ற நிலையில் மாற்றுத்திறனாளி அக்காளை கவனிக்க சிறுவன் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி அறிந்த தாசில்தார், சிறுவன் மீண்டும் பள்ளி செல்லவும், அவனது அக்காளை காப்பகத்தில் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பெங்களூரு :
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா ஆலனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மஞ்சுளா. இந்த தம்பதிக்கு அனுஷா (வயது 17) என்ற மகளும், ஆகாஷ் (15) என்ற மகனும் உள்ளனர். இதில் அனுஷா மூளைவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி ஆவார்.
சிறுவன் ஆகாஷ் அந்தப் பகுதியில் உள்ள டி.எஸ். அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இதனால் மஞ்சுளா-குமார் தம்பதி அனுஷாவை கவனித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சுளாவும், குமாரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தாய், தந்தையை இழந்த அனுஷாவும், ஆகாசும் ஆதரவற்றனர்.
தான் பள்ளிக்கு சென்றால், அக்காளை கவனிக்க முடியாதே என கருதிய ஆகாஷ் தனது பள்ளி படிப்பை திடீரென்று பாதியில் நிறுத்தினான். இதுபற்றி தாசில்தார் மஞ்சுநாத்திற்கு தகவல் தெரியவந்தது.
இதைதொடர்ந்து தாசில்தார் மஞ்சுநாத், ஆலனஹள்ளி கிராமத்திற்கு சென்று, பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியது ஏன் என்பது பற்றி சிறுவன் ஆகாஷிடம் விசாரித்தார். அப்போது தனது தாய், தந்தை இறந்துவிட்டதாகவும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ள அக்காளை பார்க்க ஆள் இல்லை எனவும், எனவே அக்காளை கவனிப்பதற்காக பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியதாகவும் அவன் தெரிவித்தான்.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த தாசில்தார் மஞ்சுநாத், சிறுவன் ஆகாஷ் மீண்டும் பள்ளி செல்ல நடவடிக்கை எடுப்பதாகவும், அவனது அக்காளை காப்பகத்தில் சேர்த்து பராமரிக்கவும் நடவடிக்கை எடுப்பதாக அவனிடம் உறுதி அளித்தார்.
இதுகுறித்து தாசில்தார் மஞ்சுநாத் நிருபர்களிடம் கூறுகையில், தாய், தந்தையை இழந்ததால் ஆகாசும், அவனது சகோதரி அனுஷாவும் ஆதரவில்லாத நிலையில் உள்ளனர். அனுஷா மூளைவளர்ச்சி குன்றியவர் ஆவார். அவரை பராமரிக்க மைசூருவில் உள்ள கருணாலயத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் ஆகாஷ் மீண்டும் பள்ளி செல்ல நடவடிக்கை எடுத்துள்ளோம். அரசு சார்பில் ஆகாஷ்- அனுஷாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்படும். ஆகாஷின் விருப்பப்படி கேத்தனஹள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா ஆலனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மஞ்சுளா. இந்த தம்பதிக்கு அனுஷா (வயது 17) என்ற மகளும், ஆகாஷ் (15) என்ற மகனும் உள்ளனர். இதில் அனுஷா மூளைவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி ஆவார்.
சிறுவன் ஆகாஷ் அந்தப் பகுதியில் உள்ள டி.எஸ். அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இதனால் மஞ்சுளா-குமார் தம்பதி அனுஷாவை கவனித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சுளாவும், குமாரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தாய், தந்தையை இழந்த அனுஷாவும், ஆகாசும் ஆதரவற்றனர்.
தான் பள்ளிக்கு சென்றால், அக்காளை கவனிக்க முடியாதே என கருதிய ஆகாஷ் தனது பள்ளி படிப்பை திடீரென்று பாதியில் நிறுத்தினான். இதுபற்றி தாசில்தார் மஞ்சுநாத்திற்கு தகவல் தெரியவந்தது.
இதைதொடர்ந்து தாசில்தார் மஞ்சுநாத், ஆலனஹள்ளி கிராமத்திற்கு சென்று, பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியது ஏன் என்பது பற்றி சிறுவன் ஆகாஷிடம் விசாரித்தார். அப்போது தனது தாய், தந்தை இறந்துவிட்டதாகவும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ள அக்காளை பார்க்க ஆள் இல்லை எனவும், எனவே அக்காளை கவனிப்பதற்காக பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியதாகவும் அவன் தெரிவித்தான்.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த தாசில்தார் மஞ்சுநாத், சிறுவன் ஆகாஷ் மீண்டும் பள்ளி செல்ல நடவடிக்கை எடுப்பதாகவும், அவனது அக்காளை காப்பகத்தில் சேர்த்து பராமரிக்கவும் நடவடிக்கை எடுப்பதாக அவனிடம் உறுதி அளித்தார்.
இதுகுறித்து தாசில்தார் மஞ்சுநாத் நிருபர்களிடம் கூறுகையில், தாய், தந்தையை இழந்ததால் ஆகாசும், அவனது சகோதரி அனுஷாவும் ஆதரவில்லாத நிலையில் உள்ளனர். அனுஷா மூளைவளர்ச்சி குன்றியவர் ஆவார். அவரை பராமரிக்க மைசூருவில் உள்ள கருணாலயத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் ஆகாஷ் மீண்டும் பள்ளி செல்ல நடவடிக்கை எடுத்துள்ளோம். அரசு சார்பில் ஆகாஷ்- அனுஷாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்படும். ஆகாஷின் விருப்பப்படி கேத்தனஹள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X