என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேச்சு - காஷ்மீர் மாணவர்கள் 3 பேர் கைது
Byமாலை மலர்17 Feb 2020 8:37 AM GMT (Updated: 17 Feb 2020 8:37 AM GMT)
பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய காஷ்மீர் மாணவர்கள் 3 பேரை கர்நாடக போலீசார் இன்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்த உள்ளனர்.
ஹூப்ளி:
கர்நாடகா மாநிலம் தார்வார் மாவட்டம் உப்ஹள்ளி டவுன் பகுதியில் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்று உள்ளது.
இந்த கல்லூரியில் படிக்கும் காஷ்மீரை சேர்ந்த 3 மாணவிகள் புல்வாமா தாக்குதல் தொடர்பான வீடியோவை சமூக வலை தளத்தில் வெளியிட்டு இருந்தன. அதில் அவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தும், புல்வாமா சம்பவத்தை வரவேற்றும் இருந்தனர்.
இதை தொடர்ந்து காஷ்மீர் மாணவர்களான அமீர், பாஷித், தலேப் ஆகிய 3 பேரையும் தேச துரோக வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
கைதான 3 மாணவர்களும் கிரிமினல் சட்ட குற்றப்பிரிவு 169-ன்படி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
3 பேரையும் போலீசார் ஜாமீனில் விடுவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வலதுசாரிகள் அமைப்பு போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நெருக்கடி காரணமாக காஷ்மீர் மாணவர்கள் 3 பேரையும் கர்நாடக போலீசார் இன்று மீண்டும் கைது செய்தனர்.
இது தொடர்பாக தார்வார் போலீஸ் அதிகாரி திலீப் கூறும் போது “காஷ்மீர் மாணவர்கள் 3 பேரும் மீண்டும் கைதாகி உள்ளனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்படுவார்கள்.
3 மாணவர்களை ஜாமீனில் விடுவித்தது தொடர்பாக ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலாக் போலீசாரை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இதே போல உள்துறை மந்திரி பசவராஜுவும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் பேசியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே மாணவர்கள் 3 பேரும் மீண்டும் கைது ஆனார்கள்.
கர்நாடகா மாநிலம் தார்வார் மாவட்டம் உப்ஹள்ளி டவுன் பகுதியில் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்று உள்ளது.
இந்த கல்லூரியில் படிக்கும் காஷ்மீரை சேர்ந்த 3 மாணவிகள் புல்வாமா தாக்குதல் தொடர்பான வீடியோவை சமூக வலை தளத்தில் வெளியிட்டு இருந்தன. அதில் அவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தும், புல்வாமா சம்பவத்தை வரவேற்றும் இருந்தனர்.
இதை தொடர்ந்து காஷ்மீர் மாணவர்களான அமீர், பாஷித், தலேப் ஆகிய 3 பேரையும் தேச துரோக வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
கைதான 3 மாணவர்களும் கிரிமினல் சட்ட குற்றப்பிரிவு 169-ன்படி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
3 பேரையும் போலீசார் ஜாமீனில் விடுவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வலதுசாரிகள் அமைப்பு போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நெருக்கடி காரணமாக காஷ்மீர் மாணவர்கள் 3 பேரையும் கர்நாடக போலீசார் இன்று மீண்டும் கைது செய்தனர்.
இது தொடர்பாக தார்வார் போலீஸ் அதிகாரி திலீப் கூறும் போது “காஷ்மீர் மாணவர்கள் 3 பேரும் மீண்டும் கைதாகி உள்ளனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்படுவார்கள்.
3 மாணவர்களை ஜாமீனில் விடுவித்தது தொடர்பாக ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலாக் போலீசாரை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இதே போல உள்துறை மந்திரி பசவராஜுவும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் பேசியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே மாணவர்கள் 3 பேரும் மீண்டும் கைது ஆனார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X