search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு - காஷ்மீர்
    X
    ஜம்மு - காஷ்மீர்

    ஜம்மு - காஷ்மீர் வளர்ச்சிக்கு ரூ.80 ஆயிரம் கோடி - மத்திய அரசு ஒதுக்கீடு

    ஜம்மு-காஷ்மீர் மாநில வளர்ச்சிக்காக ரூ80 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி நீக்கிய மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதனால் மாநில மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டதால் ஊரடங்கு, தகவல் தொடர்பு துண்டிப்பு, இணையதள வசதி நிறுத்தம் என பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

    பின்னர் படிப்படியாக இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, இணைய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அண்மையில் 2ஜி இணையசேவைகள் காஷ்மீர் முழுவதும் மீண்டும் கொண்டுவரப்பட்டது.  

    இந்நிலையில் மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.80 ஆயிரம் கோடி ரூபாய் நிதியினை ஜம்மு-காஷ்மீர் மாநில வளர்ச்சிக்காக ஒதுக்கி உள்ளது. இந்த தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×