search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக செயல் தலைவர் ஜேபி நட்டா
    X
    பாஜக செயல் தலைவர் ஜேபி நட்டா

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் குறித்து ராகுல் காந்திக்கு எதுவும் தெரியாது - ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு ஒன்றும் தெரியாது என பா.ஜ.க. செயல் தலைவர் ஜே பி நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு ஒன்றும் தெரியாது. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் தொடர்பாக 10 வரிகளை பேசுமாறு நான் அவருக்கு சவால் விடுகிறேன். அவர் அறியாமல் பேசும் அவர், மக்களை தவறாக வழிநடத்துகிறார். 

    இது தேசத்திற்கு துரதிர்ஷ்டவசமானது. சி.ஏ.ஏ.வை எதிர்ப்பவர்கள் அனைவரும் நாட்டை பலவீனப்படுத்துபவர்களே என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×