என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நகைக்கடைக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் 25 கிலோ நகைகள் கொள்ளை
Byமாலை மலர்14 Jan 2020 3:08 AM GMT (Updated: 14 Jan 2020 3:08 AM GMT)
உத்தரபிரதேசத்தில் நகைக்கடைக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் 25 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
முசாபர்நகர்:
உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜன்சாத் நகரில் பப்லு சைனி என்பவர் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று முன்தினம் மாலையில் வழக்கம்போல வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அப்போது முகமூடி அணிந்து கொண்டு 2 மோட்டார் சைக்கிள்களில் திடீரென அங்கு வந்த 4 பேர் பப்லு சைனியை துப்பாக்கி முனையில் மிரட்டி கடையில் இருந்த நகைகளை எல்லாம் அள்ளினர். பின்னர் தங்கம், வெள்ளி என சுமார் 25 கிலோ நகைகளை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த அந்த நகரில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துணிகர சம்பவம் தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜன்சாத் நகரில் பப்லு சைனி என்பவர் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று முன்தினம் மாலையில் வழக்கம்போல வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அப்போது முகமூடி அணிந்து கொண்டு 2 மோட்டார் சைக்கிள்களில் திடீரென அங்கு வந்த 4 பேர் பப்லு சைனியை துப்பாக்கி முனையில் மிரட்டி கடையில் இருந்த நகைகளை எல்லாம் அள்ளினர். பின்னர் தங்கம், வெள்ளி என சுமார் 25 கிலோ நகைகளை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த அந்த நகரில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துணிகர சம்பவம் தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X