என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேசிய குடிமக்கள் பதிவேட்டை பீகாரில் அமல்படுத்தமாட்டோம் - நிதிஷ் குமார்
Byமாலை மலர்20 Dec 2019 10:28 AM GMT (Updated: 20 Dec 2019 10:28 AM GMT)
பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தமாட்டோம் என அம்மாநில முதல்மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பாட்னா:
வங்காளதேச நாட்டில் இருந்து அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. இதன் இறுதி வரைவு பட்டியலில் பல லட்சம்பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், தேசிய குடிமக்கள் பதிவேடு அசாம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கொண்டு வரப்படும் என உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படாது என அம்மாநில முதல்மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதேபோல் மேற்கு வங்காளம் மாநிலத்திலும் குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படாது என அம்மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X