search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் பறிமுதல் செய்த மதுபாட்டில்கள்
    X
    போலீசார் பறிமுதல் செய்த மதுபாட்டில்கள்

    புத்தாண்டு விற்பனைக்கு வீட்டில் மது தயாரித்தவர் கைது - 1200 பாட்டில்கள் பறிமுதல்

    கேரளாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விற்பனைக்காக வீட்டில் மது தயாரித்தவர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து 1200 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கலக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜானத் (வயது 50). இவர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி வீட்டில் மதுபானம் தயாரிப்பதாக மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் வினோத்துக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து இன்ஸ்பெக்டர் வினோத் மற்றும் போலீசார் நேற்று ஜானத்தின் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது வீடு முழுவதும் பாட்டில் பாட்டிலாக மது பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மது தயாரிக்கும் மூலப்பொருட்கள் மற்றும் எந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மொத்தம் 1200 மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து ஜானத்தை கைது செய்தனர்.

    Next Story
    ×