search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபாட்டில்கள் பறிமுதல்"

    • சுமார் 15 லட்சம் மதிப்புள்ள உயர்ரக மது பாட்டில்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்ட மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு புதுச்சேரியில் இருந்து மகாபலிபுரம் பகுதிக்கு உயர்ரக மது பாட்டில்கள் கடத்திய வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் கூடுதல் டி.ஜி.பி. மகேஷ் குமார், ஐ.ஜி. மயில்வாகனன், போலீஸ் சூப்பிரண்டு ஷியாமளா தேவி உத்தரவின் பேரில் விழுப்புரம் மண்டல இன்ஸ்பெக்டர் சின்ன காமன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஸ்வ நாதன் இணையத் பாஷா தலைமையில் போலீசார் பட்டானூர் நாவர்குளம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான 2 சொகுசு கார்களை மடக்கி சோதனை செய்ததில் அதில் புதுச்சேரியில் இருந்து மகாபலிபுரம் சொகுசு விடுதிகளுக்கு கள்ளத்தனமாக கடத்திவரப்பட்ட சுமார் 15 லட்சம் மதிப்புள்ள உயர்ரக மது பாட்டில்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அதனை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்து செய்தனர். விசாரணையில் அவர் புதுச்சேரியை சேர்ந்த செங்குட்டுவன் மகன் பால முருகன் (25) என்பதும் இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு விடுதிகளுக்கு கள்ளத்தனமாக உயர்ரக மதுபாட்டில்களை கடத்தி செல்வதும் தெரிய வந்தது.

    கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எஸ்கார்ட்போல் ஒருவர் இருசக்கர வாகனத்தில் காருக்கு முன்னே சென்றது தெரியவந்தது.
    • பறிமுதல் செய்யப்பட்ட மதுபானம், கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றின் மதிப்பு சுமார் 10 லட்சத்துக்கு மேலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    திண்டிவனம்:

    தமிழ்நாடு அமலாக்கப் பிரிவு, மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின் பேரில், மத்திய நுண்ணறிவுப் பிரிவு விழுப்புரம் மண்டல உதவி ஆய்வாளர் இனாயத் பாஷா தலைமையில், தலைமை காவலர்கள் இளந்திரையன், கவிராஜா, மகாமார்க்ஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த செண்டூர் அருகில் வாகன சோதனை செய்தனர்.

    அப்போது புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 4128 மதுபாட்டில்களை (725 லிட்டர்) காரில் புதுச்சேரியில் இருந்து சூனாம்பேட்டைக்கு காரில் கடத்தி வருவதை அறிந்தனர். அந்த காரை அவர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.

    அப்போது போலீசார் மீது மோதுவது போல் வந்த அந்த காரை மடக்கி பிடித்தனர். காரில் சோதனை செய்தனர். அதில் புதுவை மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. எஸ்கார்ட்போல் ஒருவர் இருசக்கர வாகனத்தில் காருக்கு முன்னே சென்றது தெரியவந்தது.

    அந்த இருசக்கர வாகனம் மற்றும் காரை மடக்கி பிடித்த போலீசார் அவர்களை திண்டிவனம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் கார் மற்றும் இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் புதுவை மாநிலம் பாகூர் பகுதியை சேர்ந்த கதிரவன் என்பதும் அவரது காரை ஓட்டி வந்தவர் வானூர் அடுத்த வாழப்பட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த சூர்யா என்பதும் தெரியவந்தது.

    இந்த மதுபாட்டில்கள் புதுச்சேரியில் இருந்து சூனாம்பேடு பகுதியை சேர்ந்த ரகு என்பவருக்கு கொண்டு செல்லப்பட்டது என தெரிய வந்தது.

    2 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபானம், கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றின் மதிப்பு சுமார் 10 லட்சத்துக்கு மேலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2,325 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
    • சட்டவிரோதமாக மதுவை பதுக்கி விற்றதாக 250 பேர் மீது வழக்கு பதியபட்டது

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை கரூர் டவுன், பசுபதிபாளையம், வெங்கமேடு, வாங்கல், வேலாயுதம்பாளையம், தாந்தோணிமலை, க.பரமத்தி, அரவக்குறிச்சி, தென்னிலை, குளித்தலை, மாயனூர், தோைகமலை பாலவிடுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையத்திற்குட்பட்ட போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் சட்டவிரோதமாக மதுவை பதுக்கி விற்றதாக 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 2,325 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட தகவலை கரூர் மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.

    வேலாயுதம்பாளையம் போலீசார் மரவாபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு உள்ள டாஸ்மாக் பகுதியில் மது விற்றதாக திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் தோகைமலை அருகே உள்ள தெற்குபள்ளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் அருகே புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்த ஜெயபாரதி (வயது 31) என்பவர் மது விற்றுக்கொண்டிருந்தார். இதையடுத்து அவரை தோகைமலை போலீசார் கைது செய்தனர்.

    தரகம்பட்டி அருகே தேவர்மலை ஊராட்சி மம்பத்தையூரை சேர்ந்த ரவி (48) என்பவர் தனது பெட்டிக்கடையில் பதுக்கி வைத்து மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை சிந்தாமணிப்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • போலீசார் சோதனையில் சிக்கியது
    • 10 பாட்டில்கள் பறிமுதல்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உதயசூ ரியன் மற்றும் போலீசார் நேற்று பஸ் நிலையம், வட் டார வளர்ச்சி அலுவலகம், கொண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப் போது கொண்டாபுரம் மாருதி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அரசு மது பாட் டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்வ தாக தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து போலீசார் அந்த வீட்டை சோதனை செய்த போது, கள்ளத்தன மாக அரசு மதுபாட்டில். களை பதுக்கி அதிகவிலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அங்கிருந்த 10 மது பாட்டில் களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    மேலும் இச் சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் மணி (வயது60) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரை ஓட்டி வந்த புதுச்சேரியை சேர்ந்த அந்துவானா பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • மதுபாட்டில்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டு மதுராந்தகம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மதுராந்தகம்:

    புதுச்சேரியில் இருந்து மதுராந்தகம் அருகே சூனாம்பேடு வழியாக காரில் அதிக அளவு மது பாட்டில்கள் கடத்தி வருவதாக மத்திய புலனாய்வு நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் இனயத் பாஷா தலைமையில் சூனாம்பேடு அருகே உள்ள வேலூர் கிராமம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. மொத்தம் 1248 மது பாட்டில்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    இதையடுத்து காரை ஓட்டி வந்த புதுச்சேரியை சேர்ந்த அந்துவானா பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரியில் இருந்து சட்டவிரோதமாக சூனாம்பேடு பகுதிக்கு மதுபாட்டில்களை கடத்தி சென்றதாக தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து மதுபாட்டில்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டு மதுராந்தகம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றது
    • வாகனத்தில் 2 அட்டை பெட்டிகளில் மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் போலீசார் சோதனை சாவடியில் வந்த வாகனங்களை மறித்து சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வேண் ஒன்று வந்த போது போலீசார் அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அந்த வாகனத்தில் 2 அட்டை பெட்டிகளில் மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் வாகனத்தின் உரிமையாளர் விஜயகுமார் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • கருவேப்பிலை வைத்து ஒரு மூட்டையில் லோடு ஏற்றி வந்தார்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மலை அடிவார பகுதிகளில் சூதாட்டங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கணுவாய்பாளையம் தண்டி பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (வயது 45) என்பவர் மோட்டார் சைக்கிளில் கருவேப்பிலை வைத்து ஒரு மூட்டையில் லோடு ஏற்றி வந்து கொண்டிருந்தார். அவருக்கு பின்னாள் கணுவாய்ப்பாளையம் நேரு நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரும் அமர்ந்திருந்தார். அவர்கள் 2 பேரையும் பிடித்து போலீசார் நடத்திய சோதனையில் கருவேப்பிலை மூட்டையில் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற 132 மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 132 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

    விழுப்புரம் அருகே வேனில் கடத்தி வரப்பட்ட 960 மதுபாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் அடுத்த வாக்கூர் பகண்டைகூட்டுரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். போலீசாரை பார்த்ததும் வேனில் வந்த 2 பேர் சற்று முன்னதாகவே வேனை நிறுத்தி விட்டு, இறங்கி தப்பி ஓடினார்கள். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை விரட்டிச்சென்றனர். இருப்பினும் அவர்களை பிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து போலீசார் வேனை சோதனை செய்ததில், 960 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து வேனில் இருந்த ஆவணங்களை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் விழுப்புரம் அருகே உள்ள எல்.ஆர்.பாளையத்தை சேர்ந்த பன்னீர், ஏழுமலை ஆகியோர் என்பதும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கு மதுபாட்டில்களை வேனில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து வேனில் இருந்த 960 மதுபாட்டில்களையும், அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட வேனையும் போலீசார் பறிமுதல் செய்ததோடு, தப்பி ஓடிய பன்னீர், ஏழுமலை ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட வேன், மதுபாட்டிலின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். 
    ×