search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுச்சேரியில் இருந்து மகாபலிபுரத்துக்கு சொகுசு காரில் கடத்தப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
    X

    புதுச்சேரியில் இருந்து மகாபலிபுரத்துக்கு சொகுசு காரில் கடத்தப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

    • சுமார் 15 லட்சம் மதிப்புள்ள உயர்ரக மது பாட்டில்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்ட மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு புதுச்சேரியில் இருந்து மகாபலிபுரம் பகுதிக்கு உயர்ரக மது பாட்டில்கள் கடத்திய வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் கூடுதல் டி.ஜி.பி. மகேஷ் குமார், ஐ.ஜி. மயில்வாகனன், போலீஸ் சூப்பிரண்டு ஷியாமளா தேவி உத்தரவின் பேரில் விழுப்புரம் மண்டல இன்ஸ்பெக்டர் சின்ன காமன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஸ்வ நாதன் இணையத் பாஷா தலைமையில் போலீசார் பட்டானூர் நாவர்குளம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான 2 சொகுசு கார்களை மடக்கி சோதனை செய்ததில் அதில் புதுச்சேரியில் இருந்து மகாபலிபுரம் சொகுசு விடுதிகளுக்கு கள்ளத்தனமாக கடத்திவரப்பட்ட சுமார் 15 லட்சம் மதிப்புள்ள உயர்ரக மது பாட்டில்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அதனை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்து செய்தனர். விசாரணையில் அவர் புதுச்சேரியை சேர்ந்த செங்குட்டுவன் மகன் பால முருகன் (25) என்பதும் இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு விடுதிகளுக்கு கள்ளத்தனமாக உயர்ரக மதுபாட்டில்களை கடத்தி செல்வதும் தெரிய வந்தது.

    கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×