என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
15 தொகுதிகளிலும் பா.ஜனதாவுக்கு ஆதரவு அலை வீசுகிறது: எடியூரப்பா
Byமாலை மலர்4 Dec 2019 2:30 AM GMT (Updated: 4 Dec 2019 2:30 AM GMT)
இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் பா.ஜனதாவுக்கு ஆதரவு அலை வீசுவதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு :
முதல்-மந்திரி எடியூரப்பா உப்பள்ளி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் நிலையான ஆட்சியை ஏற்படுத்த நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். வருகிற பிப்ரவரி மாதம் கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளேன். இதில் விவசாயிகளின் மேம்பாட்டிற்கான புதிய திட்டங்கள் இடம் பெறும். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர், நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம் என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனால் இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் அத்தகைய நிலை தென்படவில்லை.
எங்கு பார்த்தாலும் பா.ஜனதாவுக்கு ஆதரவு இருப்பது தெரிகிறது. பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை வீசுவதால், 15 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. மாநிலங்களவை இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளால் ஒரு வேட்பாளரை கூட நிறுத்த முடியவில்லை.
இதன் மூலம் அக்கட்சியினர் தோல்வியை ஒப்புக்கொண்டனர் என்பது தெளிவாக தெரிகிறது. வருகிற 9-ந் தேதிக்கு பிறகு எடியூரப்பா ராஜினாமா செய்வார் என்று காங்கிரசார் சொல்கிறார்கள். இடைத்தேர்தல் முடிவு என்னாகிறது என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். அதுவரை எதிர்க்கட்சியினர் அமைதியாக இருப்பது நல்லது.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
முதல்-மந்திரி எடியூரப்பா உப்பள்ளி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் நிலையான ஆட்சியை ஏற்படுத்த நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். வருகிற பிப்ரவரி மாதம் கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளேன். இதில் விவசாயிகளின் மேம்பாட்டிற்கான புதிய திட்டங்கள் இடம் பெறும். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர், நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம் என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனால் இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் அத்தகைய நிலை தென்படவில்லை.
எங்கு பார்த்தாலும் பா.ஜனதாவுக்கு ஆதரவு இருப்பது தெரிகிறது. பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை வீசுவதால், 15 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. மாநிலங்களவை இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளால் ஒரு வேட்பாளரை கூட நிறுத்த முடியவில்லை.
இதன் மூலம் அக்கட்சியினர் தோல்வியை ஒப்புக்கொண்டனர் என்பது தெளிவாக தெரிகிறது. வருகிற 9-ந் தேதிக்கு பிறகு எடியூரப்பா ராஜினாமா செய்வார் என்று காங்கிரசார் சொல்கிறார்கள். இடைத்தேர்தல் முடிவு என்னாகிறது என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். அதுவரை எதிர்க்கட்சியினர் அமைதியாக இருப்பது நல்லது.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X