என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரக்யா சிங்கை உயிருடன் எரித்து விடுவேன் - காங்கிரஸ் எம்.எல்.ஏ. மிரட்டல்
Byமாலை மலர்29 Nov 2019 10:08 PM GMT (Updated: 29 Nov 2019 10:08 PM GMT)
கோட்சேவை புகழ்ந்து பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரக்யா சிங் என் தொகுதிக்கு வந்தால், உயிருடன் எரித்து விடுவோம் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோவர்த்தன் டாங்கி தெரிவித்துள்ளார்.
போபால்:
கோட்சேவை புகழ்ந்து பேசியதாக பா.ஜனதா பெண் எம்.பி. பிரக்யா சிங் குறித்து சர்ச்சை எழுந்தது. அவருக்கு கண்டனம் தெரிவித்து, மத்தியபிரதேச மாநிலம் ராஜ்கார் மாவட்டம் பியோரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோவர்த்தன் டாங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், “மகாத்மா காந்தி கொலையாளியை புகழ்வது போன்ற அருவறுப்பானது வேறு எதுவும் இல்லை. இப்போது பிரக்யா சிங்கின் கொடும்பாவியை எரித்துள்ளோம். அவர் என் தொகுதிக்கு வந்தால், உயிருடன் எரித்து விடுவோம்” என்றார்.
அவரது மிரட்டல் பேச்சு, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை உண்டாக்கியது. அவரது கருத்துக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று மாநில காங்கிரஸ் மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில், கோவர்த்தன் டாங்கி நேற்று மன்னிப்பு கோரினார். அவர் கூறுகையில், “ராஜ்கார் மாவட்ட மக்கள், பிரக்யா சிங்கை புறக்கணிப்பார்கள் என்ற அர்த்தத்தில் சொன்னேன். பேசும்போது தவறாகி விட்டது. நாங்கள் மகாத்மாவின் அகிம்சை கொள்கையை பின்பற்றுபவர்கள். எனவே, மன்னிப்பு கேட்கிறேன்” என்றார்.
கோட்சேவை புகழ்ந்து பேசியதாக பா.ஜனதா பெண் எம்.பி. பிரக்யா சிங் குறித்து சர்ச்சை எழுந்தது. அவருக்கு கண்டனம் தெரிவித்து, மத்தியபிரதேச மாநிலம் ராஜ்கார் மாவட்டம் பியோரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோவர்த்தன் டாங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், “மகாத்மா காந்தி கொலையாளியை புகழ்வது போன்ற அருவறுப்பானது வேறு எதுவும் இல்லை. இப்போது பிரக்யா சிங்கின் கொடும்பாவியை எரித்துள்ளோம். அவர் என் தொகுதிக்கு வந்தால், உயிருடன் எரித்து விடுவோம்” என்றார்.
அவரது மிரட்டல் பேச்சு, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை உண்டாக்கியது. அவரது கருத்துக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று மாநில காங்கிரஸ் மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில், கோவர்த்தன் டாங்கி நேற்று மன்னிப்பு கோரினார். அவர் கூறுகையில், “ராஜ்கார் மாவட்ட மக்கள், பிரக்யா சிங்கை புறக்கணிப்பார்கள் என்ற அர்த்தத்தில் சொன்னேன். பேசும்போது தவறாகி விட்டது. நாங்கள் மகாத்மாவின் அகிம்சை கொள்கையை பின்பற்றுபவர்கள். எனவே, மன்னிப்பு கேட்கிறேன்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X