என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி, அமித்ஷாவை அழைப்போம் - சிவசேனா
Byமாலை மலர்26 Nov 2019 4:04 PM GMT (Updated: 26 Nov 2019 4:04 PM GMT)
மகாராஷ்டிரா முதல் மந்திரி பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க வருமாறு பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக சிவசேனா தெரிவித்துள்ளது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் இன்று காலை உத்தரவிட்டது. அடுத்த சில மணி நேரங்களில் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசும், துணை முதல் மந்திரி அஜித் பவாரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் இடைக்கால சபாநாயகராக பாஜகவை சேர்ந்த காளிதாஸ் கொலம்ப்கர் தேர்வு செய்யப்பட்டார். ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, நாளை காலை 8 மணிக்கு மகாராஷ்டிரா சட்டசபை கூடுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை மும்பையில் நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரியாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, உத்தவ் தாக்கரே கூடிய விரைவில் மாநில கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோர உள்ளார். கவர்னர் உடனடியாக ஆட்சியமைக்க அனுமதி அளிக்கும் பட்சத்தில் வரும் 1-ம் தேதி (டிசம்பர் 1) மாலை 5 மணியளவில் சிவாஜி பூங்காவில் தனது கூட்டணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுடன் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல்மந்திரியாக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவியேற்க உள்ள விழாவில் நீங்கள் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுப்பீர்களா? என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்விக்கு பதிலளித்த ராவத், 'பதவி ஏற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுக்க உள்ளோம். நாங்கள் உள்துறை மந்திரி அமித்ஷா-வையும் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கவுள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X