search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றம்
    X
    பாராளுமன்றம்

    இ-சிகரெட்டுக்கு தடை: அவசர சட்டத்திற்கு பதிலாக மக்களவையில் புதிய மசோதா தாக்கல்

    இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு பதிலாக மக்களவையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்து, அதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி அவசர சட்டத்தை பிறப்பித்தது. அதன்படி, இ-சிகரெட்டுகளை உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் இ-சிகரெட் தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் குற்றமாக கருதப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், இ-சிகரெட்டை தடை செய்யும் அவசர சட்டத்திற்குப் பதிலாக, மக்களவையில் இன்று இ-சிகரெட் தடைச்சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். 

    இ-சிகரெட்டுகளை உற்பத்தி செய்தல், ஏற்றுமதி-இறக்குமதி செய்தல், சேமித்து வைத்தல், அனுப்புதல், விற்பனை செய்தல், விளம்பரம் செய்தல் ஆகியவை அபராதத்துடன் கூடிய தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு, தண்டனை மற்றும் அபராதம் விதிக்க இந்த சட்ட மசோதா வகை செய்கிறது.

    இ-சிகரெட்

    இந்த சட்டத்தை மீறி முதல்முறை தவறு செய்பவர்களுக்கு ஓராண்டுவரை ஜெயில் தண்டனை அல்லது ரூ.1 லட்சம்வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். அடுத்தடுத்து தவறு செய்பவர்களுக்கு 3 ஆண்டுவரை ஜெயில் தண்டனை அல்லது ரூ.5 லட்சம்வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

    இதேபோல் இ சிகரெட்டுகளை சேமித்து வைத்தால் 6 மாத சிறைத்தண்டனை அல்லது 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம், அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

    இ-சிகரெட் உற்பத்தி செய்யும் இடங்கள் மற்றும் குடோன்களில் அதிரடியாக சோதனை செய்ய அதிகாரிகளுக்கு இந்த மசோதா அனுமதி அளிக்கிறது. 
    Next Story
    ×