என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திரனின் அரியணையை கொடுத்தாலும் பா.ஜ.க.வுடன் இணையமாட்டோம் -சிவசேனா
Byமாலை மலர்22 Nov 2019 7:21 AM GMT (Updated: 22 Nov 2019 7:21 AM GMT)
இந்திரனின் அரியணையை தந்தாலும் பா.ஜ.க.வுடன் இனி சிவசேனா இணையப் போவதில்லை என சிவசேனா கட்சி எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மும்பை:
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க., சிவசேனா கட்சிகள் இடையே முதல்-மந்திரி பதவி விஷயத்தில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் கனவு தகர்ந்தது. எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாததால் கடந்த 12-ம் தேதி அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து பாஜகவை அடுத்து பெரும்பான்மை பெற்ற சிவசேனா கட்சி, எதிர் அணியான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைக்க தீவிரம் காட்டி வந்தது. இது தொடர்பாக 3 கட்சியின் முக்கிய தலைவர்களும் அவ்வப்போது சந்தித்து ஆலோசனையும் நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, சிவசேனா கட்சி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க உள்ளதாகவும், 5 ஆண்டுகளுக்கும் சிவசேனா கட்சியை சேர்ந்தவரே முதல்வராக இருப்பார். சுழற்சி முறையில் முதல்வர் பதவி இருக்காது எனவும் சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.
முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்ள பாஜக ஒப்புக்கொண்டது பற்றிய வெளியான செய்தி குறித்து கேட்டதற்கு பதில் அளித்த ராவத், ‘மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சியமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். கூட்டணி ஆட்சியமைப்பதற்கு பாஜகவிற்கு கொடுத்த நேரம் முடிந்து விட்டது. இனி இந்திரனின் அரியணையை தந்தாலும் பாஜகவுடன் சிவசேனா இணையாது’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X